வெள்ளி, 24 மார்ச், 2017

பைரவர் : இரவனுக்கு நன்றி

  பைரவர் என்பது நாம் நம் ஆலயங்களில் அடிக்கடி கேட்கும் சொல். பைரவர் சாமியைக் கும்பிடும் பற்றரும் அதிகமே.

பல உயிர்ப் பைரவர்கள் பகலில் பெரும்பாலும் உறங்கி இரவில் சுற்றி வருவர்.  ஆலயங்கள் இரவில் முன்னிரவிலே மூடப்பெறுவதால் பைரவர் சாமிகட்கு இரவுகளில் பற்றருக்கு அருள்பாலிக்கும் வாய்ப்புகள் இல்லை.

நாம் கவனிக்க இருப்பது வீட்டுப் பைரவர்களை. இவர்களில் பலர் இரவில் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் காவலுக்கு விடப்படுவர்.  இவர்களின் சேவையோ மாபெரும் தகையதாகும்.  வைகுண்டம், வையாபுரி, வையகம், வையம் என்று வரும் பலசொற்களின் தொடக்கமான வை என்னும் சொல் வைரவர் என்பதில் முன்னிலை பெற்றிருப்பதைக் காணலாம்,இச்சொல் முன் நிற்பது ஒரு சிறப்பு என்பதறிக.

வை என்பது இறைவனால் வைக்கப்படுதலைக் குறிக்கிறது. இது வைரவனுக்குப் பட்டமளித்தது போன்றது.

இவன் இரவில் உழைப்பவன்.  ஆகையால் :  " இரவன் "  என்று
இச்சொல்லிலே சுட்டப்பட்டவன்,

வை + இரவன் =  வைரவன்.  இங்கு இகரம் கெட்டுச்  சொல் அமைந்தது.  வையிரவன் >  வயிரவன் என்று ஐகாரம் கெட்டும்\   சொல் அமையும். வேண்டாத நீட்டத்தைக் குறுக்கிச் சொல்லை அமைப்பது ஒரு நல்ல கொள்கை.  அறு + அம் =  அறம் என்பதில் உகரம் கெட்டுப் புணர்ந்தது காண்க; மேலும் வகர உடம்படு மெய்யும் நுழைக்கப்படவில்லை.  இவை சொல்லமைப்பினில் கையாளும் தந்திரங்கள்.

இறைவனால் நமக்காக வைக்கப்பட்ட நன்றியுள்ள இரவனுக்கு நன்றி
நவில்வோம்.
வைரவர்  -  பைரவர்


வை இரவு அன் >  வையிரவன் > வைரவன் அல்லது வயிரவன்
வையி > வயி;
வயி > வை
எப்படியாயினும் வேறுபாடின்மை காண்க.

கருத்துகள் இல்லை: