புதன், 15 மார்ச், 2017

கேது

கேவலம் என்ற சொல்லை அறிஞர்கள் முன்னர் விளக்கியுள்ளனர்.
கெடுவலம் என்பதே கேவலம் என்று திரிந்துள்ளது. வலிமை கெட்ட‌
நிலை என்பது பொருள்.

கெடு > கேடு > கே.

கேது என்ற சொல்லும் கெட்ட கோள் என்று பொருள்படுவதே. பலர்
இன்றும் இப்படி நினைக்கின்றனர். கேது என்பதில் து என்பது விகுதி.

கேதம் என்பதும் கெடுதம் என்ற சொல்லின் திரிபுதான், சாவு என்பது
பொருள்.

கெடார்நாதன் என்ற சொல்லுக்கு சிவபத்தர்கள் கெட்டுப்போக மாட்டார்கள், அவர்களின் நாதன் சிவன் என்பது பொருள்.


கருத்துகள் இல்லை: