வெள்ளி, 17 மார்ச், 2017

எழுத்துக்களை விழுங்கிப் பேசுதல்

எழுத்துக்களை விழுங்கிப் பேசுதல்.

பேச்சு வழக்குக்கும் எழுத்துநடைக்கும் உள்ள வேறுபாடுகளைக் கவனித்தால், பல சொற்களில் எழுத்துக்களை விட்டுப் பேசுதல் என்பது
தமிழருடையதும் ஏனைத் திராவிட மொழியினருடையதும் வழக்கம்
என்பது நன்றாகத் தெரியும்.

கொடுக்கிறா(ர்)க(ள்) ‍  > கொடுக்கிறாக.
செய்கிறாள்  >  செய்(கி)றா(ள்)

என்று ஒன்றிரண்டு சொற்களைப் பார்த்தாலே போதும்.  பேச்சுமொழி
முழுவதும் இங்ஙனம் பல விழுங்கல்கள் மிளிர்கின்றன.

-மேற்காட்டியபடி ரகர ஒற்று மறைதல் எழுத்துநடைச் சொற்களிலும் உள.

சேர் > சேர்மித்தல் > சேமித்தல்.
நேர் > நேர்மித்தல் > நேமித்தல்.
( நியமம் > நியமி > நியமித்தல் என்பது வேறு சொல் என்பது
தெளிவு; பொருள் ஒன்றாயினும் ).

வேறு சில சொற்களிலும் ரகர ஒற்று மறைந்துள்ளது.

சேர் > சேர் + கு + அரன் =  சேகரன்.
உமையாளுடன் சேர்ந்திருப்பவன்; அல்லது நிலவுடன் சேர்ந்து தோன்றுபவன் ( எனப் பொருள் பலவாறு விரிக்கலாம்)

சேர் + து =  சேது  என்பதும் அது.

சேத்து என்ற சொல்லும் உளது.

கரன்  என்பது பிறழ் பிரிப்பால் விளைந்த  சொல்.
சிவ  என்பதும் சே என்று திரியும்.

to edit..




கருத்துகள் இல்லை: