வியாழன், 30 மார்ச், 2017

தாழ்மதித்தல் தாமதம்

பண்டைப் போர் நடவடிக்கைகளில் தயார்நிலையில் இருக்கும் ஓர் படையின் தலைவன் எதிரிப்படை எப்போது இக்களம் வந்துசேரும் என்பதை கணிக்கவேண்டியவன் ஆகிறான். இன்று வராது, நாளைப்
பொழுது புலருமுன் வந்துவிடும் என்று மதிப்பிட்டு அதுவரைத் தம் படையணியிலுள்ளோர் உண்டும் களித்தும் ஓய்வுகொண்டும் இருக்க உத்தரவிடுகிறான்.  இதுதான் தாழ்மதித்தல் என்பது. வேறு விடையங்களிலும் இங்ஙனம் தாழ்மதிக்கவேண்டி யிருக்கலாம்.

இத்தாழ்மதிப்பு பின் ஓரெழுத்து இழந்து தாமதி என்று ஆகி வழங்கியது.
இது தாமதம் என்று பெயர்ச்சொல் ஆனது. வாழ்த்தியம் என்பது தன் ழகர ஒற்றை இழந்து வாத்தியம் ஆனது போல இச்சொல்லும் திரிந்தமைந்தது என்பதை உணர்க.  தாழ்வணி  >  தாவணி .

தாழ்மதித்தல் என்பது நேரத் தாழ்மதிப்புக்கு ஏற்ற சொல் என்பதறிக.

தமிழில் சொற்கள் எழுத்திழப்பு  பெருவரவினது  ஆகும் .   உசாவடி  என்பது
சாவடி என்று திரிந்தமை காண்க .

கருத்துகள் இல்லை: