சனி, 11 மார்ச், 2017

சூத்திரர் comparison with other words

continue reading from last post

ஒன்றைச் சூழ்ந்து (ஆலோசித்து) அறிந்து திறம் காட்டுவோரே
சூத்திரர் ஆவர். எனவே மூளைவேலையர் என்பது பொருள்.
இசை பாடுதல் சூத்திர வேலை. இதற்கு மூளையும் வேலை செய்யவேண்டும்.

சூழ்த்திறர் என்பதில் உள்ள ழகர ஒற்று மறைந்தது.

இதுபோன்று திரிந்த இன்னொரு சொல்லைக் கவனித்து, இதனுண்மை
நாமுணரலாம்.

வாத்தியங்கள் என்பவை திருமணம், விழாக்கள் முதலிய நிகழ்ச்சிகளில் இடம்பெறுவன.  இயம் என்றாலே இசைக்குழு என்று
பொருளுண்டு.  வாழ்த்தி இசைக்கும் குழு  வாழ்த்தியம். இதிலுள்ள‌
ழகர ஒற்று மறைந்து அது வாத்தியம் என்றானது.  வாழ்த்துதல் என்பதைச் சிற்றூர் மக்கள் வாத்துவது என்றே ழகர ஒற்று இல்லாமல்
பேசக் கேட்கலாம்.  மக்கள் கல்வி பெறப்பெற வாழ்த்து என்பதை
வாத்து என்று சொல்வது தவறு என்று போதிக்கப்படுவதால் திரிபுகள்
மறைந்துவிடும். ஆனால் முன்காலத்து ஆட்சிபெற்ற திரிபுகள் நம்
மொழியினின்று அகலா. ஆர்கெஸ்ட்ரா போன்ற ஆங்கிலச் சொல் அதனிடத்தை வந்து பிடித்துக்கொண்டால் அப்புறம் வாத்தியம் என்ற‌
சொல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் வாய்ப்பு ஏற்படும்,

சூத்திரம் சூத்திரர் முதலிய சொற்கள் பொருளிழிவு உற்றவை. நாற்றமென்ற சொல்போல இப்போது பொருள் இழிந்தது அல்லது சொற்பொருள் அழிந்தது. பிராமணர் அல்லாதவர் தாங்கள் எதையும் அறிந்து அமைப்பவர்கள் என்று ஒருகாலத்தில் ஒரு தற்காப்பு வாதத்தை முன் நிறுத்தியிருக்கலாம். உயர்வு அளிக்கப்படாதவிடத்து அது நிகழ்வது இயல்பு ஆகும். அதனால் அவர்கள் சூத்திரர் என்று தங்களைக் குறித்துக்கொள்ளவும் பிறரால் குறிக்கப்படவும் ஆனது.
பிற்காலத்து நிகழ்வுகளில் சாதி ஒன்றையே மக்கள் நினைவில் கொண்டதனால் சொற்பொருளை மறந்தனர்.சொல்லும் இழிநிலைக்குத்
தள்ளுண்டது என்பதறிக.

கருத்துகள் இல்லை: