செவ்வாய், 21 மார்ச், 2017

மாலையில் கண்கள் தேடுகையில்...........

பொடிசெய்து வைத்தேன் முறுக்கினையான்;
குடிபெய   ராச்சிறு குருவிகளே
காலையில் வந்து கத்துகையில்
கைகளில் ஒன்றுமே இல்லையன்றோ!
மாலையில் கண்கள் தேடுகையில்
மயங்கும் வேளையில் அகன்றுவிட்டீர்!
நீல வான்வெளி வெற்றிடமாய்
நிலைத்திடப் போமோ வந்திடுவீர்!
ஞாலம் ஒலிபெற் றுயர்ந்திடவே
நாணா தென்னிடம் வந்திடுவீர். 

கருத்துகள் இல்லை: