புதன், 8 நவம்பர், 2017

இன்று முழுதும் இந்த நாய்.......!



இன்றுமுழுதும் இந்த நாய் ஏனோ
உறுமிக்கொண்டே இருக்கிறது?
தின்றது நேற்றே இன்றில்லை என்ற
கிட்டாத நிலையினை வெறுக்கிறது!

சோற்றுத் தட்டையை உருட்டி விட்டது
சோர்வின்றிச் செருப்பைக் கடிக்கிறது.
நேற்றை நன்னிலை மீள்க மீள்கென
நெஞ்சம் வேகமாய்த் துடிக்கிறது.

பதவி இழந்திட்ட முன்னாள் அரசனின்
பரிதவிப்பு கண்ணில் தெரிகிறது
உதவி செய்திட உள்ளமும் சொல்லுது
உலகத் தியற்கையும் புரிகிறது. 

 குறிப்புகள்:

நேற்றே -  இங்கு ஏகாரம் இசைநிறை.
 
 



கருத்துகள் இல்லை: