வெள்ளி, 3 நவம்பர், 2017

மழைத்துளியே கொஞ்சம் படு



மழைத்துளியே  என்மேல் கொஞ்சம் படு;----முற்றும்
மருவாமலே தண்மை உருவாகவே  உன்னை இடு;
உழைத்தனியே இனிதே காண  விடு --- வந்து
உறவாடவே நெஞ்சம் இனிவாடுதல் ஆமோ தடு.

விளைத்தனையே இன்பம் ஈடொன்  றிலை ---- உன்னை
விழையாமலே மண்ணில் உழல்சோர்விலே உயிர்கள் பல .
களைத்தவரே துள்ளி முன்னுற் றெழ  ----  பொழிவாய்
கணமேனுமே துளிகள் படவேணுமே தண்மை பெற.

உழை = பக்கம்.
ஆமோ =  ஆகுமோ
 




கருத்துகள் இல்லை: