சனி, 3 செப்டம்பர், 2016

உதிரம்

சொல்லமைப்பு:உதரம் ‍  உதிரம்

இங்கு குறித்த இரு சொற்களில் உதிரம் என்ற சொல்லை முதலில் எடுத்துக்கொள்வோம்.

உடலில் எப்பகுதியில் வெட்டு, கீறல் முதலியன ஏற்பட்டாலும் , இரத்தம் வருகிறது.  அரத்தம் என்பதே சரியான சொல் என்பதும்,  அர் என்பது
சிவப்பு நிறம் குறிப்பது என்பதும்,  அர்+அத்து+அம் = அரத்தம், இதுபின் ரத்தம் என்று தலையிழந்து, பின் ரகரத்தில் சொல் தொடங்கக் கூடாது என்பதால்
இகரம் சேர்த்து இரத்தம் ஆனது என்பதும்  நமக்கு முந்திய ஆய்வாளரால் நிறுவப்பட்ட ஒன்றாம்.

அரத்தம்   சொட்டும்,  வடியும்  அல்லது உதிரும் தன்மை உடையது. அதனால் அது உதிர்+அம் = உதிரம் எனப்பட்டதென்பது  அறிதற்குரியது.

போரில் இ/அரத்தம் அல்லது உதிரம் சிந்தியோருக்கு  மன்னர்களால் வழங்கப்  பட்ட நிலம்  உதிரப்  பட்டி  எனப்பட்டது  காண்க.

அரத்தம் =  குருதி எனவும் படும்.

உதரம் என்பது வயிறு. இதை அடுத்துக் காண்போம்.


கருத்துகள் இல்லை: