செவ்வாய், 13 செப்டம்பர், 2016

செருப்பு என்ற சொல்.


செருகுதல் என்றால் ஒன்றில் ஒன்றை இடைநுழைத்தல் என்று பொருள்படும்.  தோல்வார்களை ஒன்றில் ஒன்று பிணைத்துச் சேர்த்துத்
தைத்தே செருப்பு உண்டாக்கப்படுகிறது.  செரு என்ற  அடிச்சொல்லில்லிருந்து செருப்பு என்ற சொல் தோன்றிற்று.

செரு > செருகு.
செரு > செருகுதல்:   இடைநுழைத்தல்..\

செரு >  செருப்பு.

செருப்பு > செருப்பல் :  இச்சொல் வழக்கில் இல்லை.

செ(ரு)ப்பல் >  செப்பல்.

இதில் ருகரம் இடைக்குறைந்தது.

செரு> செருமான்> செம்மான்.

இதுலும் இடை ருகரம் இடைக்குறைந்தது.

வரு என்ற வினைப்பகுதியும் சொல்லில் தன் ருகரம் இழக்கும்

வரு> வ > வந்தான்.

பெருமான் என்ற சொல்லும் பெம்மான் என்று இடைக்குறையும்.

கரு> (கருமாளன் ) > கம்மாளன்.

இடைவடிவங்கள் வழக்கிறத்தல் மொழியில் இயல்பு.

சில  சொற்களில் ருகரம்  போய் அதற்குப் பதில் ஒரு ரகர  ஒற்றுத் தோன்றும்:

கரு   > கருப்பம்  >கர்ப்பம் .
கரு நாக்கு >  கர் நாக்கு.  (பேச்சில் ).
கருப்பூரம்  >  கர்ப்பூரம்  > கற்பூரம்  (கல்+ பூரம் , மற்றொரு முடிபு )
கருமம் >  கர்மம் .
கருவம் > கர்வம் .(  not to be pronounced as garvam  no place for G)
கருத்தா >  கர்த்தா .   from /connected to கருத்து.
தருதல் :  தரு > தருமம் > தர்மம்  (கொடை )  



கருத்துகள் இல்லை: