வெள்ளி, 30 செப்டம்பர், 2016

அளவின்றி உண்ணோம் யாங்கள்

அளவின்றி உண்ணோம் யாங்கள்;
அடிசிலைச்  சமன்செய் துண்போம்;
களவில்லை நெஞ்சில் ஊணைக்
கருதியே வாழ்வ தில்லை;
இளைஞர்கள்  இதைச்சொன்  னாலும்
இவருடல்  எடையால் வீங்கி
அளிகமும் நலமும்  தேய்தல்
அனைவரும் அறிந்த தொன்றாம் .

பருத்தலோ பயனே இல்லை
பருகிடும்  இன்பம்  நீங்க
ஒருத்தரும் விழைவ தில்லை;
உண்மையும் இதுவே தானோ?
திருத்தம் மேற்கொள்வீர் இன்றே
தின்பதில் கொழுப்பு  சீனி
நிறுத்தியே காணின் யாக்கை
நீங்குமோ நலம்சேர்  வாழ்வே 






வீங்கு  வீக்கு !    

கருத்துகள் இல்லை: