சனி, 24 செப்டம்பர், 2016

இறைச்சி how derived?

இறைச்சி  என்பது பாலரும் அறிந்த சொல் ஆகிவிட்டது, ஞாயிற்றுக் கிழமைகளில் பலர் இறைச்சிக் குழம்பு  உண்ணும் பழக்கம் உடையோராய்
விளங்குகிறார்கள்.

இறைச்சி என்ற சொல் எங்கிருந்து வந்த தென்பதை அறிந்தால் அதுவும் இன்பமே.  உண்பதே இன்பம், சொல் உண்டானது அறிதல் வேண்டா என்பாரும் இருப்பர்.

ஒரு விலங்கு இறந்தபின் கிடைப்பதே அதன் இறைச்சி. உயிர்க்கொலை செய்தாலே ஊன் கிடைக்கிறது.\

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிரும்  தொழும்     (குறள் )

இறு > இற > இறப்பு.  இறுதல் என்பது முடிதல். கொல்லுதலும் இதில் அடங்கும் .
இறு   >  இறை.   முடிவு.

இறு > இறை >  இறைச்சி.

சி  என்பது விகுதி .    எழு > எழுசசி  என்பது காண்க ,

இறைச்சி  :  இறந்த அல்லது கொல்லப்பட்ட உடலில் கிடைக்கும் அதன் சதை.

இறு என்ற சொல்லுக்குப் பல பொருளுண்டு.  அவற்றுள் ஒன்றையே
இங்கு கூறினோம்.  அறிந்து மகிழ்க.

இறைச்சி என்பது உயிர் இல்லாமை குறிக்கும் தொழிற்பெயர்.  ஆகுபெயராய்
ஊனைக் குறித்தது.



கருத்துகள் இல்லை: