வியாழன், 15 செப்டம்பர், 2016

ஆதி பகவன் மற்றும் பரையர்

பரை, பரையன், பரைச்சி என்பதன் ஓர் ஆய்வை இங்குக் கண்டீர்கள்.

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_10.html

மேலும் 2000 ஆண்டுகட்கு முன் சாதிப் பகுப்புகள் இற்றை இறுகிய நிலையில் இருக்கவில்லை. அகமண முறைகளும்  (endogamy ) ஏற்பட்டுவிடவில்லை.
ஆகவே மாப்பிள்ளை கொள்வதோ பெண்கொள்வதோ தங்கள் குலத்துக்குள்ளேதான் செய்யவேண்டும் என்ற கட்டு இருக்கவில்லை.  இப்போது மற்ற நாடுகளில் இருப்பதுபோல, மற்ற தகுதிகளைப் பார்த்துத்
திருமணம் செய்துகொண்டனர்.   (   a community  not resisting integration and completely merging with surrounding populations )

சாதி வேறுபடுதலால் ஏற்படும் முரண்பாடுகள் எவையும் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

1900 ஆண்டுகள் வரை, எந்த விதக்  கட்டுப்பாடுமின்றி, வெவ்வேறு குழுவினர் தங்களுக்குள் கொள்வனை கொடுப்பனை மேற்கொண்டனர்
என்று குருதி ஆய்விலிருந்து (டி என் ஏ ஆய்வு  blood analysis  )  நன்கு தெரிகிறது.
இந்த ஆய்வுகளின் சில குறிப்புகள் முன் இடுகைகளில் தரப்பட்டுள்ளன


எனவே பகவன் என்னும் பிராமணனும் ஆதியும் திருமணம் செய்துகொண்டிருந்தாலும். வெறுமனே சேர்ந்துகொண்டு வாழ்ந்திருந்தாலும் இதில் தற்கால சாதிமுறைக்  கட்டுப்பாடுகளுக்குரிய‌
அமைப்பியல்புகள் எவையும் இல. தீண்டாமைக் கட்டுக்களும் ஏதும் இல்லை.

ஒரு வள்ளுவக் குறு நில மன்னன் முன் ஒரு பிராமணன்  பாடிப் பரிசில்
பெற்றமையும் புற நானூற்றில் காணக்கிடக்கின்றது.

அதியமானுடன் ஒளவையார் கள்ளுண்டதையும் அவன் அவர்க்குத் தலை
வருடி அன்புகாட்டியதையும் புற நானூறு எடுத்துரைக்கிறது.

மிகப் பிற்காலத்து பழக்க வழக்களின் அடிப்படையில் அவை இல்லாப்
பழங்காலத்தை உணர்வது வழுவாகும் ,.

பரையரை ஒரு குடி  என்றே பழ நூல்கள் கூறுகின்றன .  குடி  எனின் குடிமகன் ./ குடிமக்கள் . நானிலங்களிலும் பரவி  (வியாபித்து )  வாழ்ந்தவன் பரையன் .குறிஞ்சியில் மட்டும் வாழ்ந்திருந்தால்  குறவன் , இப்படியே பிற நிலங்களிலும் கொள்க . பரவி நின்றவன் பரையன். பரையருள்  80 வகை இருந்தனர்  ஆதலின்  இவர்களில் பலர் வேறு சாதிகளாகி  இருத்தல் கூடும்.
அரசர்களே சாதிகளை நேமித்து நிறுவாகம் செய்தனர்.

will edit and introduce explanations as necessary later.


You may also like to read other posts of compatible and incompatible views:

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post.html.பார்ப்பனர் 

http://sivamaalaa.blogspot.com/2016/08/manu-and-his-edicts.html

http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_31.html

http://sivamaalaa.blogspot.com/2016/06/why-castes-were-institutionalised-in.html  சாதிகள் தோற்றம்

http://sivamaalaa.blogspot.com/2015/03/blog-post_73.html  கலந்துபோன  இந்தியர்கள்

Amendments made as outsiders seem to have interfered in this post,.  Will be reviewed.
 5.4.18










கருத்துகள் இல்லை: