வியாழன், 8 செப்டம்பர், 2016

வள்ளுவர் என்ற சொல்லமைப்பையும்...

திருவள்ளுவ நாயனார் ஒரு வெறும் வள்ளுவர் அல்லர்; அவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். அவரை வெறுமனே "வள்ளுவன்" என்று சுட்டலாகாது என்பது திருவள்ளுவமாலையால் அறியப்படுகின்றது. இதற்குக் காரணங்கள் உள்ளன. முதலாவது: அவர் ஆதிபகவன் என்னும்
தம்பதியினருக்குப் பிறந்தவர் என்றும் அவர்களில் ஒருவர் பிராமணர் என்றும் கூறப்படுவது. ஆகவே அவர் உயர்வான குடும்பத்தில் பிறந்தவர் என்று கொள்ள இடமுண்டு.  எனின்  அவர் திருவள்ளுவர் ஆகிறார். இரண்டாவது அவரெழுதிய உலகப் பொதுமறை ஈடு இணையற்ற நூல். இத்தகைய உயர் நூலை இயற்றிய அறிவாளி, அவர் யாராயினும் மிக்க உயர்வு உடையவரே ஆவார் . அதனாலும் அவர் திருவள்ளுவர் ஆகிறார்.

திரு என்ற அடைமொழியின்றிச் சுட்டினால் அது அவரைக் குறிக்காது
என்று திருவள்ளுவமாலை சொல்வதுபோல் தோன்றுகின்றது. அப்படியானால் "வள்ளுவன்" என்பது திருவள்ளுவர் பெயரில் வருகையில் அது சாதிப்பெயர் ஆகாது  என்பதுபோல் தெரிகிறது. வள்ளுவர் என்போர் அறிவிப்பாளர் என்று  பொருள் படுவதாலும். திருவள்ளுவர் அப்பெயரைப் புனைப்பெயராய்க் கொண்டிருந்திருந்ததனாலும்  அவர் எங்கும் காணப்படும்
குல வள்ளுவரல்லர்; அறிவு பரப்பிய அறிவிப்பாளர் ,அக்குலத்தினர் அல்லர் என்பதாகவுமிருக்கலாம்,  அரச குடும்பத்தில் பிறக்காத ஒருவர்
தம்மை அரசு என்று குறித்துக்கொள்வதுபோலும்,  (அதாவது உயர்வாக),
அடிமைக் குலத்தில் தோன்றாத ஒருவர் தம்மைத் தாசர் என்று குறித்துக் கொள்வது போலும் ( எடுத்துக்காட்டு: துளசி தாசர் ),  தொண்டர் தலைவராய் இருப்பவர் ஒருவர் தம்மைத் தொண்டரடியார் என்பது போலவும் ஒரு சொல்லாட்சி இது என்பதை விளக்கவே, திருவள்ளுவமாலைப் புலவர், திருவள்ளுவரை வள்ளுவர் என்பான் பேதை என்று விளக்கியுள்ளார் என்றும் நாம் நினைக்க இடமுண்டு.

வள்ளுவர் என்ற சொல்லமைப்பையும் பின் ஆராய்வோம் ,

தொடரும்.

கருத்துகள் இல்லை: