திங்கள், 5 செப்டம்பர், 2016

வனதாய் > வனிதை. காடு வனம் & கொடுந்தமிழ்

காடு என்பது காக்கப்படுவதாகிய மரங்கள் செடிகள் கொடிகள் அடர்ந்த இடம்.

கா (காத்தல் )  >  காடு.  (டு விகுதி).

ஒப்பு நோக்குக:  மா >  மாடு.  மா‍ = விலங்கு;  மாடு: ஒரு குறிப்பிட்ட‌
விலங்கு;  ஆக்கள்.

கா> கான் > கானம் > கானகம்.   (காடு).

கடு > காடு.  முதனிலை நீண்டசொல்.   கடுமையான (கடத்தற்கரிய இடம்)

கடு > கடம்.  (வேங்கடம்).  கடத்தற்கரிய வெம்மை மிக்க இடம்.

 வல் > வன்  (லகர  னகரத் திரிபு.)

வன் > வனம்.   காக்கப் படும் இடமாகிய காடு.

வனப்பு >  அழகு.   வனம்+ ஆம் + தரம் =  வனாந்தரம்.  (காடு என்னும்
தரமுடைய இடம்).  வனம் ஆகும் தரம்.  ஆகுபெயராய் வனம் குறித்தது.

வனப்பு > வன + தாய் >  வனதா > வனிதா.  

இங்கு அழகு குறிக்கும் வன என்ற அடி வனி  என்று திரிந்தது.

வனதாய் > வனிதை. வலிமிகாச் சொற்புனைவு.

செந்தமிழில் வனத்  தாய் என்று வரவேண்டும் .  கொடுந்தமிழில் வனிதா என்று திரிந்தது.  கொடுந்தமிழில் திரியும்.   கொடு  = வளைவு . கொடுந்தமிழ் = வளைந்த தமிழ் .   ஆயினும் தமிழே.  கொடுந்தமிழ்  மேலும் திரிந்து பாகதங்கள் ஆயின.

காடு வனம் & கொடுந்தமிழ்

கருத்துகள் இல்லை: