வியாழன், 13 டிசம்பர், 2018

வினையிலிருந்து இன்னொரு வினைச்சொல் உருவாக்கம்

தமிழ்மொழி தனக்கு வேண்டிய சொற்களைத் தானே படைத்துக்கொண்டது. இதனை சொல்லித் தெரிந்துகொண்டதில்லை.  ஆய்வே ஆசிரியன். இப்போது இதனைச் சில சொற்களைக் கொண்டு நிலைநாட்டுவோம்.  பிறரும் கூறியிருத்தல் கூடும். சொல்லாய்ந்த யாவருடைய நூல்களும் நமக்குக் கிடைக்கவில்லை; சிலவே கிட்டின.  ஆகவே எங்காவது யாம் படிக்காத நூலொன்றில் கூறப்பட்டிருக்கலாம். எமக்கும் படித்தவை சில இப்போது நினைவிலில்லை.

ஒரு பொருள் இன்னொரு பொருளை அடுத்துச் செல்கிறது.

அடு >  அடுத்தல். (வினைச்சொல்).

அடுத்த பொருள் நின்ற பொருளைப் போய் அடைக்கிறது.

அடு >  அடு+ ஐ >  அடை

அடை > அடைத்தல்.   அடைதலுமாம்.

இவ்வாறு வினையினின்று இன்னொரு வினைச்சொல் தோன்றுகிறது.

சில பொருள்கள் தண்ணீரை இழுத்துக்கொள்கின்றன.  துணி காகிதம் முதலியன அத்தகையவை.  ஈர்த்தல் என்பது இழுத்துக்கொள்ளுதல் என்று பொருள்படும்.  இழுக்கப்பட்டு உள்ளிருக்கும் நீர்ப்பதம் ஈரம் எனப்படும்.  இது
ஈர்+ அம் என்று பகுதி விகுதிகள் புணர்த்த சொல்லாகும்.

ஈர் ( வினை ) > ஈரித்தல்.  (  நீரால் ஈரம் கொள்ளுதல் ). (  இன்னொரு வினைச்சொல்).

வேண்டின் ஈர்ப்பித்தல் என்றொரு சொல்லையும் உண்டாக்கலாம்.  இது இழுக்கச் செய்தல் என்று பொருள்படும். பிறவினை என்பர்.  ஈர் என்பது தன்வினை.

அறிந்து மகிழ்வீர்.

எழுத்துப்பிழைகள் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: