ஞாயிறு, 23 டிசம்பர், 2018

பிள்ளைகளும் மகத்துவமும்.

மகத்துவம் என்ற  சொல்லின் பொருண்மை இன்னும் சரியாக அறிந்துகொள்ளாதார் பலர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

மகத்துவமென்பது பெருமைக்குரிய  ஒரு நிலையையே நம்முன் கொணர்ந்து வைக்கின்றது.  இங்குக் கூறும் பெருமை யாதெனின்,  ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகள் இருக்கவேண்டும். குழந்தைகளின் மழலையை வள்ளுவம் பெரிதும் புகழ்கின்றது.   "குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்  " என்பர் திருவள்ளுவ நாயனார்.  தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவ ரென்பது  பிள்ளை இல்லாதவர் எனற் பொருட்டாகவு மிருத்தல் கூடும்.

பிள்ளைகள் இருத்தலே மகத்துவம் ஆகும்.

மக:   பிள்ளை என்று பொருள்.

து :  இது உடையது ( உடையராய் இருத்தல் ) என்னும் பொருளது.

அம்:  என்பது விகுதி.

இவற்றை இணைப்பின் "  மகத்துவம் " என்னும் சொல் கிடைக்கிறது.

மகத்துவம் எனில்  மாட்சிமை அல்லது பெருமை என்று பொருள்கூறலாம்.

இதன் ஆதிப்பொருள் குழந்தையுடைமை என்பதே.  பழங்காலத்தில் பிள்ளை இல்லாதவர்கள் மன்பதைக்குள் மதிக்கப்படவில்லை.  பிள்ளைகள் உடைமையானது ஒரு மனைமாட்சி ஆகும்.  இதுவே இச்சொல்லினுள் அடங்கி யிருக்கும் அமைப்புப் பொருளாகும்.  இதைத் தமிழால் விளக்கினாலே இவ் வரலாற்றுண்மை தெரியவருகிறது.

அமைப்புப் பொருள் மறைந்து இன்று மாட்சிமை என்ற பொருளே வழக்கில் உள்ளது.

அறிந்து மகிழ்க.

திருத்தம் பின்

கருத்துகள் இல்லை: