திங்கள், 10 டிசம்பர், 2018

ச த ஒலித்தொடர்பு மோனைகளிலும் தெரிகிறது.

நீங்கள் தமிழ்ப்பாடல்களைப் பாடும்போதோ அல்லது சிறந்த கவிகளின் பாடல்களைப் படிக்கும்போதோ ( வாசிக்கும்போதோ ) 1 தகர சகர ஒலித்தொடர்பினைக் கூரிந்து கவனிக்கவேண்டும்.

சகரத்திற்கு தகரமும் தகரத்திற்குச் சகரமும் மோனைகளாக வரும்.

கீழே தரப்படுவது ஒரு திரைப்பாடல்தான் என்றாலும் அதை எழுதிய கவி பட்டுக்கோட்டை மோனையில் நல்லபடி கவனம் செலுத்தியுள்ளார்.

தூங்காதே தம்பி தூங்காதே ---- நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.

இங்கு தூ என்பது சூ என்பதுபோலவே சோ என்ற அடுத்த அடி முதலெழுத்துக்கு  மோனையாய் வருவது காண்க.

இந்தக் கர்நாடக சங்கீதப் பாடலையும் நோக்குவீர்:

சுந்தர மன்மத மோன நிலை கண்டு
தொண்டு செய்வாய் மனமே.

சந்ததம் என்றும் சிவகாமி பங்கனார்
ஆனந்தமாகிய ஆனந்த நாடக.....

என்பவை நினைவிலுள்ள வரிகள்.

மோனை: சு > தொ.  இது சு > சொ என்பது போலவே ஆகும்.

---------------------------------------

அடிக்குறிப்பு:

வாய் > வாயித்தல் > வாசித்தல்.  யகர சகரப் போலி.

இன்னொன்று: நேயம் > நேசம்.

நெய் + அம் =  நேயம். முதனிலை நீட்சிப் பெயர்.
நெய்போல் உருகிக்கொள்ளும் நட்பு என்பது இதன் பொருள்.

நேயம் > நேகம் > ஸ்நேகம் .  ( அயலாக்கத் திரிபு ).
யகர ககரத் திரிபும் காண்க.

தங்கு>  சங்கு > சங்கம்.  த ச ஒலித்தொடர்பே.

ஓர் உயிரி தங்கி இருப்பது சங்கு.
புலவர்கள் தங்கிக் கவிபாடிச் சென்ற இடம் சங்கம்.


கருத்துகள் இல்லை: