திங்கள், 10 டிசம்பர், 2018

சின்மயம் சொல்லமைப்பு.

உலகம் என்பது ஒரு மேடை என்று ஒப்பிட்டுக் கூறிய அறிஞரும் உள்ளனர்.

நம் மனம் ஒரு மேடை என்றும் அதில் இறைவன் ஆடுகின்றான் என்றோரும்
இருக்கின்றனர்.

இறைவன் உலகம் முழுவதையும் தன்  நடமாடும் அல்லது நடமிடும் இடமாகக் கொண்டவன் என்றும் ஓர் அறிஞர் கூறுவார்.

இறைவன் ஒரு பெரிய ( உலகம் போன்ற )  இடத்திலும் நிறைந்து உள்ளான். மனம் போன்ற சிற்றிடத்திலும் நிறைந்து உள்ளான்.

உலகம் சிவ மயம் .

நம் உள்ளமும் சிவ   ம யமே.

He prevails in the entire world; he also prevails in our hearts.

உலகம் பெரிய மயம் ;  உள்ளம் சின்ன மயம்.

உள்ளம் அவனுக்குச் சிற்றம்பலமும் ஆகும்.  

அம்பலமாவது   ஆடுமிடம் 

கோவிலும் சின்ன மயமே .  உலகமே பெரிய மயம் ,

மயம்  =  கலந்திருத்தல்.

மயங்குதல் :  ஒன்றுபட்டுக் கலந்து நிற்றல்.  இதற்கு வேறு பொருள்களும் உள்ளன.

மய   >மயர்வு   (மயக்கம் ).
மய  > மயங்கு .
மய  >  மயம்
மய >  மயிந்துதல் > ஒன்றில் இன்னொன்று புகுந்து அடங்குதல்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின் ( தொல்காப்பியத் தொடர்).

மல் > மய் .
மல்  > மலைதல்  (மயக்கம் )   மல் > மலைவு  (மயக்கம் ). மலைத்தல் ( மயக்கம் , தடுமாறுதல் )
மல் > மர் > மருள் :  மயக்கம்.
மல் > மால் ( மயக்கம் ).   " உன்பால்  மாலாகினேன் மாதவா " ( கர்நாடக இசைப்பாட்டு ).  "  மாலும் என் நெஞ்சு"  ( திருக்குறள் தொடர்).
 
ஒரு சிறிய இடத்தில் நிறைந்து நிற்றலே சின்ன மயம்  =  சின்மயம் 

ஒரு மயத்தைப் பிற மயங்களும் தொட்டு நிற்கின்றன.

பிற மயங்கள் தொட்டு நிற்கும் ஒரு மயம் மையம் ஆகிறது.

மய > மை.

மையல் : காதல் மயக்கம்   மையல் > < மயல்.
மை>  மைத்து :  மயக்கம்.  ( து : தொழிற்பெயர் விகுதி:  விழு > விழுது: கை > கைது ).
"  மையாத்தி நெஞ்சே "  ( திருக்குறள் தொடர் ).
மையாத்தல் > மயங்குதல்; ஒளிமழுங்கிய் நிலையில் மயக்கம்.
மை > மைனா :  அலகில் மஞ்சள் நிறம் கலந்த சிறு பறவை. கருவலானது; வெள்ளைச் சிறகும் உண்டு. (   நிறங்கள் மயங்கிய பறவை). பார்த்து மயங்கச் செய்வது எனினும் ஆம்.
மையா  ( மை+ ஆ ) =  மை நிறத்துக் காட்டுப் பசு அல்லது கலந்த நிறமுடைய பசு.
மைமா > கரும்பன்றி.  (  மா = விலங்கு).

அந்த மையத்திலும் இறைவன் உள்ளபடியால், அது சின்ன மையமும் ஆவதால் அதுவும் சின்மயமே;  அதாவது  "சின்மை."


சிவமயம் என்றால் சிவம் யாவிலும் கலந்துள்ளவர்,  அவரில்லாத இடமில்லை என்பது கருத்து.   ஒரு சிறு இடத்தில் ( உள்ளம், கோவில் ) அவர் கலந்து வெளிப்படுபவர்.  அது சின்மயம் என்பது உணர்த்தப்பெற்றது.

ஞானி என்பவன்,  இறைவனோடு சிந்தனைமூலமாக ஒன்றித்து நிற்பவன்.  ஞான் (  நான் )  + நீ (  நீ  )(கடவுள் )  =  ஞானி.  ஞான்+ நீ + அம்  =  ஞானம்.  ஆன்மாவும் இறைவனும்  ஒருபண்புடைமையால், ஆன்மா ( சிறியது ) சின்மயம் ஆகும்.  ஞான் நீயுடன் ஒன்றிய பின் ஞான் மறைந்துவிடுகிறது,

கருதுக:  நகர ஞகரத் திரிபுகள்.

நான் > ஞான்
நயம் > ஞயம்   ( ஞயம் பட வுரை - ஒளவை )
நாயம் ( நய+ அம் )  > ஞாயம்.  ( நயமுடைய தீர்மானம் அல்லது குதிர்வு ) திரிபு: நியாயம்.  நய+ அம்=  நாயமென்பது  முதனிலை திரிந்த தொழிற்பெயர். வினைச்சொல்: நயத்தல். ( நலமாக்குதல்,  நயம்படுத்துதல் ).
பாவாணர்:  நி( ல் ) + ஆ(ய) + அம் = நியாயம்:  நிற்பதுடையது,  இவ்வாறாயின் நியாயம் வேறுசொல்.


கருத்துகட்கு ஏற்ப அமைந்த சொற்கள் இவை. மயம் சின்மயம் என்பன. அறிந்து மகிழ்க.

திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: