திங்கள், 10 டிசம்பர், 2018

எழுந்தபின் நலமே



(தாழிசைகள்.)


இந்தவேலை அந்தவேலை எந்தவேலை
 தானும்,
இருந்துவிட்டால் எழுதுவது நானுமேதான்
எதை?

சொந்தவேலை வந்தவேலை செய்துகொண்டி-
ருந்து,
சூரியெனக் கூரியதோர் விரைவதனிற்
பதை!

உந்துமன வேலைகளை ஓய்வுனவே
தள்ளி
ஒன்றுகூடச் செய்யேனேல்  நன்றலாத
விதை,

வெந்துலகில் மேலெழுமோர் வெதும்புகிற
துயர்,
வீழ்ந்துவிட்டேன் உறங்கியதால் எழுந்திடநன்
னிலை.

அரும்பொருள்:

ஓய்வுனவே  =  ஓய்வு உன்ன ( ஓய்வு கருதி )
பதை :  நெஞ்சு பதைத்தல் கொள்.

உந்துமன  மனம் உந்துகிற.
விதை :  தொடக்கம் என்னும் கருத்தில்.

நன்றலாத:  நன்மை இல்லாத.

கருத்துகள் இல்லை: