செவ்வாய், 11 டிசம்பர், 2018

பூச்சியம்

தமிழிலுள்ள எண்ணுப்பெயர்கள்  அடிப்படையாக ஒன்றுமுதல் ஒன்பது வரை. ஒன்றுமின்மையைக் குறிக்க இப்போது ஒரு சுழியம் இடப்படுகிறது.  இதற்குப் பூச்சியம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் பூச்சியத்திற்கு வேறு பெயர்களும் உண்டு. சுன்னம், சுழி, சோகி ( சோதிடக்கலையில் ) என்பனவும் இதைக் குறிக்கவரும் என்று தெரிகிறது.

பூசுதல் என்பதொரு வினைச்சொல். இதற்குச் சித்திரமெழுதுதல் என்றொரு பொருளும் உண்டெனினும் வரியை இழுத்தல், வரி உண்டாக்கிக் கோடுகளைத் தொடர்புறுத்தல் என்றும் பொருளாகும்.

ஒரே கோட்டினைத் தொடர்புறுத்துவதாயின் அக்கோடு சுற்றிவந்து தொடங்கிய இடத்தையே தொடவேண்டும். இதுவே எளிதான தொடக்கம் தொடுதலாகும்.  இன்னும் கோழிமுட்டை என்றொரு பொருளும் உள்ளது.

இவற்றை நோக்க பூசுதல் என்ற வினைச்சொல்லிலிருந்து பூச்சியம் தோன்றியதை உணரலாம்.

பூசு > பூச்சு > பூச்சியம்.

பூசு + உ :  பூசுதலில் முன் செல்லுதல்.  இது பூச்சு என்று உருக்கொள்ளும்.

பூச்சு+  இ  :  பூச்சு இங்கே ( தொடக்கத்துக்கே) வந்துவிடுதல்.

எனவே இதிலுள்ள துண்டுச்சொற்கள்:

பூசு  ( வினைச்சொல்)

உ:   ( முன் செல்லுதல் )  சுட்டுச்சொல்.

இ  (  திரும்பி இங்கே வந்துவிடுதல் )  சுட்டுச்சொல்.

அம் என்பது அமைவு காட்டும் விகுதி.

இவை அனைத்தும் இணைக்க பூச்சியம் என்ற சொல் கிடைக்கிறது.

இது பூச்சுவேலை செய்தவர்களால் அல்லது வண்ணம் தீட்டுவோரால் அமைக்கப்பட்ட சொல் என்பதில் ஐயமில்லை.  ஆனால் நன் கு அமைக்கப்பட்டுள்ளது. சுட்டுக்களைப் பயன்படுத்தியதும் திறமை ஆகும்.a

அட்க்குறிப்பு:

பூஜை ( பூசை) என்பதிலிருந்து பூஜ்யம் வந்ததென்பது முன்னையோர் கருத்து.
பூஜை மதிப்பிற்குரியது ஆதலின் பூஜ்யமுன் மதிதக்கது என்பது அவர்கள் கருந்து. இதனினும் வரைந்து இணைத்தல் என்ற பூசுதல் என்ற சொல்லிலிருந்து வந்ததென்பது இன்னும் மிக்கப் பொருத்தமானது ஆகும். முன்னையோர் பூசுதல் என்னும் சொல்லைஆயவில்லை.





கருத்துகள் இல்லை: