செவ்வாய், 30 அக்டோபர், 2018

தீபாவளி வாழ்த்துக் கவி

வருக வருக  தீ(பா)  வளியே
வருகவந்  தேற்றுக ஒளியே
மெருகு தரும் மனக் களியே----அருள்
மேனிலை வாழ்வெமக் களியே.

அன்புடன் யாவரும் இணைவோம்
அடுத்தவர் பண்பொடும் பிணைவோம்
அன்பு  மழைதனில் நனைவோம்
ஆழ்நண் புக்கலம் வனைவோம்,

பிரித்தியங்  கறாத தேவி----எமைப்
பேணி வளர்த்திடும்  துர்க்கை
உரித்தாம் நலமிகத் தருவாள்  ----- நாம்
ஓமெனக் காத்திட வருவாள்.

இனிப்புறு நற்பல காரம் ---- பல
ஏந்திப் பிறர்க்களித் திடுவோம்
கனிச்சுவை தன்னொடு தேறல்----மரக்
கறியுண வேமிசைந்   திடுவோம்.

ஆடைகள் பட்டென யாவும் --- நாம்
அணிந்து மகிழ்ந்திடு வோமே.
வீடெங்கிலும் ஒளி விளக்கு --- வைத்து
விழைந்து வணங்கிடு வோமே.

மக்கள் அனைவரும் தீமை --- அண்டா
மாகலைச் சீர்தனை மேவித்
தக்க பொருள்புக ழோடு ---தம்
தாய்மனை ஓங்கிட,   வாழ்வோம்

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் உரியவாகுக.




கருத்துகள் இல்லை: