புதன், 3 அக்டோபர், 2018

கச்சை கட்டி ஆடு.

இன்று கச்சை என்ற சொல்லை அறிந்து இன்புறுவோம்,

கடின ஒலிகளாய் உள்ளனவற்றை விலக்கிச் சொற்களை அமைக்கும் தந்திரத்தைப் பண்டைச் சொல்லாய்வு நிபுணர்கள் அறிந்திருந்தனர்.  நிபுணர் என்போர் யார் எனில் நிலையறிந்தோரே நிபுணர் எனப்படுவர்.

எடுத்துக்காட்டு:   இடு அம் என்ற பகுதி விகுதி இணைந்து இட்டம் என்ற சொல்லானது.  ஒரே சொல்வடிவத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுமாதலால் பண்டை நாட்களில் பல்வேறு வடிவங்களைப் படைத்துக்கொண்டனர் தமிழரும் பிறரும்.

இடு + சை என்ற இரண்டில் இடு பகுதி;   சை என்பது விகுதி.  இடுச்சை ஆகும்.
இட்டம் என்பதும் இடுச்சை என்பதும் ஒன்றுதான்.  மனத்தை இடுவதே இட்டமும் இடுச்சையும் ஆகும்.   இடுச்சை என்பதில் உள்ள டுகரம் களைந்தால் இச்சை ஆகி உச்சரிக்க இன்னும் எளிதாகிவிடுகிறது. இத்தகைய தந்திரங்கள் தொல்காப்பியர் காலத்திலே கண்டுபிடித்துவிட்டனர் என்பதைக் கூறியுள்ளோம்.  புதுமை ஒன்றுமில்லை.

பீடுடைய மன்னன் : பீடு மன்:  இது சுருங்கி பீமன் ஆனது.  அப்புறம் வீமனும் ஆனது.  இதில் கவனிக்க வேண்டுவது:  டுகரம் களைதல்.  அல்லது இலக்கணப்படி இடைக்குறை.

இனிக் கச்சை அறிவோம்:

கட்டு > கட்டுச்சை > கச்சை.

கட்டு என்பது கடு என்ற சொல்லின் விரிவுதான்.

கடு+ சை :>  கடுச்சை > கச்சை.

ஆகவே கச்சை ஆனது.  அதற்குரிய வினைச்சொல்:  கட்டுதல் என்பதே.

கச்சை:  கட்டுதல்,  போட்டி போடுதல் என்பது போல.



-------------------------------------------------------------------------------------------------
நிற்பு :  இது நிலை என்னும் பொருளது.
உணர்:  உணர்வோர்.   நிற்புணர் :  நிபுணர்.  இதில் றகர ஒற்று குறைந்தது.
ஒரு கலையின் அல்லது அறிவியலின் நிலை உணர்ந்தோர் நிபுணர். இது ஆகுபெயராய் உணர்ந்த மனிதனைக் குறித்தது.

விபுலானந்தர் என்ற பெயரில் விபுலம் என்பது விழுபுலம் என்பதன்
இடைக்குறை.  ஆனந்தம் என்பதும் முன் விளக்கப்பட்டது.  ழுகரத்தை எடுத்துவிட்டு ஒரு புதுச்சொல்லைப் படைத்தது திறமைதான்.

இவை 2010ல் விளக்கி வெளியிடப்பட்டவைதாம்.

பிழைகள் புகின் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: