செவ்வாய், 2 அக்டோபர், 2018

அழிவிற் பட்டோர்க்கு அஞ்சலி

பிறப்ப தனைத்தும் இறப்ப துளமையே
பின் என் மனமேன் தன் நிலை கலங்குதல்.
முதுநூல் பலப்பல இதனுண் மைசெலச்
சொல்லியும் பக்குவம் வெல்லத் தவறிய
பற்றாக் குறையோ முற்றாச்  சிந்தையோ?
வற்றா வளத்தின் வண்தமிழ் அறிந்தார்
உற்றார் அல்லர் இத்தகு துயரே
நிலநடுக் கத்தினில் நேரந்த அழிவொடு
பலகடு நிலையும் பட்டழி வுற்றவர்
யாவ ராயினும் கண்ணீர்
மேவத் துளக்குறும் நோவறி நெஞ்சே.

கருத்துகள் இல்லை: