வெள்ளி, 26 அக்டோபர், 2018

சிறுமி கொலை - குற்றவாளி பிடிபடுவானா?

நோக்குங்கால் யாவரும்  கால்களுடன் கைகளுடன்
பார்க்கவிரு கண்களுடன் பண்பமை  ----  நீக்கமுடன்
ஞாலமேல்  உள்ளார்   ஞயமுடையார்  யார்யாரோ
காலமும் சொல்லா விடை.


விராலிமலை புதுக்கோட்டை வீட்டின்  முன்னே
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தன்னை
வராதவொரு வன்னெஞ்சன் வந்து கண்டு
வளைத்தாழ்த்திப் பிடித்திட்டான்  கொண்டு சென்றான்
உறாததுயர் உறப்போவ தறிந்தி   டாத
ஒண்சிறுமி கண்டமதை அறுத்து க் கொன்றான்
இராதுவெளித் துணையுமிலர் சிறார்கள் சற்றும்
ஏற்பிலாத  தெருக்களியில் தவிர்ப்பீர் ஆட்டம்!


( இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளியைப்
பிடித்துவிட முடியுமா --  என்பது தெரியவில்லை. )


இராது - வீட்டுக்குள் இருக்க மாட்டாமல்.

கருத்துகள் இல்லை: