ஞாயிறு, 14 அக்டோபர், 2018

இலக்குவன் கோடிழுத்த தகையோன்.

நம் தொன்மங்களில் வரும் அழகிய பல பெயர்களில் சிலவற்றைத் தமிழின் மூலமாகப் பொருள் கூறிய இடுகைகளை முன்பு வாசித்திருப்பீர்கள்.

இர்  >  இர் +ஆம் + அன் =  இராமன்.  ( தமிழின்படி பொருள்: கருநிறமுடையோன்.  உலகில் மிகப் பெரியது விண்.  அந்த விண்ணின் நிறம் கருமை.  அங்கு சூரியன் (< சூடியன் ) ஒளிவீசுவதால் அது (கருமை) அவ்வளவாகத் தோன்றுவதில்லை. இரவில் பார்த்தாலே ஓரளவு புரியும்.  அந்தக் கருமையை நிலவு நட்சத்திரங்கள் முதலியவை கொஞ்சம் கலைத்துவிடக்கூடும்.  இராமர் விண்ணின் நிறத்தவர். கண்ணனும்தான். )

இர் > இரா > இரா+வண்ணன் > இராவணன் ( ஓர் ஒற்றுக் குறைந்த இடைக்குறை).  எல்லாம் என்பது எலாம் என்று கவிதையில் வருகையில் அழகாக உள்ளதன்றோ?

அனுமன்:   மனிதனுக்கு அண்மையானவன்.   அண் = அன் =அனு.   மன் - மனிதன் என்பதன் அடிச்சொல்.
கைகேயி -  கை நீட்ட முடியுடையவள். (முன் இடுகைகள் காண்க).

பீமன் = பீடுடைய மன்னன்.  பீடு+ மன் = பீடுமன் > பீஷ்மன்.

தமிழ்ச்சொற்களைக் கவினுறுத்த ஜ, ஷ, ஹ  இன்ன பிற தோன்றி இன்புறுத்தும்.  வேறு சில சொற்களும் விளக்கியுள்ளோம்.  அவற்றைப் பழைய இடுகைகளில் காண்பீராக.

இன்று இலக்குவன் அல்லது லட்சுமணன் என்ற பெயரைப் பார்ப்போம். இதுவும் இராமகாதையில் உள்ள பெயரே.  காதை = கதை.

சீதையைக் கட்டுப்படுத்தத் தரையில் ஒரு கோடு வரைந்து இதைத் தாண்டிச் செல்லாதே என்று கட்டளை இட்டவன் இலட்சுமணன்.  "இலட்சு" என்பது இலக்கு என்பதும் ஒருபொருள் குறிக்கும் திரிபுகள்.

ஒ.நோ: பட்சி >< பக்கி ;  நக்கத்திரம் > நட்சத்திரம்.  பக்கம் > பட்சம்

கோடும் இலக்கும் தொடர்புடைய கருத்துகள். கோடிழுத்த இடமே இலக்கு ஆகும்.

இழு> இலு என்றாகும். இன்னொரு எடுத்துக்காட்டு:  பழம் > பலம்.   மாம்பலம் என்ற ஊர்ப்பெயர் காண்க.  பழ ஆகாரமே பல ஆகாரமாகி, பலகாரம் என்று தோன்றி பழத்துடன் பிற ஆகாரங்களையும் குறித்ததாகத் தமிழறிஞர் கூறியுள்ளனர். 

அலங்காரம் என்பது அழகு அல்லது அழகுபடுத்துதல் என்பதே.   அடிச்சொல்: அழ.  அழ என்பதன் திரிபு  அல.   அலங்காரம் என்பதை அலம்+காரம் என்று சிலர் பிரிப்பர்.  உண்மையில் இது :  அல+ கு + ஆர் + அம் ஆகும்.   அழகுக்கு நிறைவு அல்லது அழகுசேர் நிறைவு என்பதாகும்.  ஆர்:  நிறைதல்.  அம் விகுதி.
கு என்பது சேர்விடம் குறிக்கும் ஓர் இடைநிலை. இது வேற்றுமை உருபாய் பிறவிடத்து வரும்.  அல+ கு என்பது அலங்கு என்று மெலிந்து நின்றது,  அலக்கு என்று வலிக்கவில்லை . அதாவது வல்லெழுத்து மிகவில்லை.  அலங்கு ஆர் அம் - அலங்காரம் :  அழகின் நிறைவு எனினுமாம்.  இதை இங்கு சொல்லக் காரணம்:  இழு> இலு போலத் திரிந்தது அழ>அல என்பது;  பழ > பல என்பதுமது.

இனி இலக்குவனுக்குத் திரும்புவோம்.  இலு> இலக்கு > இலக்குவன், இலக்குமணன் என்பது இன்னொரு வடிவம்.  அதைப் பின் விளக்குவோம்.

இலக்குவன் என்பது காரணப்பெயர். இயற்பெயரன்று.  தசரதன் என்பதும் காரணப்பெயரே. இயற்பெயர்களைக் காண்டல் அரிதே.  கோடிழுத்ததால் இப்பெயர் வந்தது என்பதறிக.   வால்மிகி தமிழறிந்தவர் என்பது தெளிவு. மற்றும் சங்கப்புலவருமாவார்.


இலு + கு = இலக்கு.  கோடிழுத்த இடம்.


























அடிக்குறிப்புகள்:

இந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு விடைதெரியுமா?

வாசித்தல்: இச்சொல் எப்படி அமைந்தது?

வாசித்தல் என்ற சொல் எப்படி அமைந்தது?

கருத்துகள் இல்லை: