வியாழன், 4 அக்டோபர், 2018

ஐயப்பன் கோவிலும் சட்டமும்.

சட்டப்படி எல்லா வயதுப்  பெண்களும் ஐயப்பனைக் காணச் செல்லலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  சட்டம் என்று மட்டும் பார்த்தால் அது சரியென்று பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இருந்தாலும் நம் பெண்கள் சில வேளைகளில் கோவிலுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடவே செய்கின்றனர்.  எடுத்துக்காட்டாக சைவமல்லாத உணவுகளை உட்கொண்டு அதன்பின் கோவிலுக்குச் செல்லாமல் இருந்துவிடும் பல பெண்கள் இருக்கின்றனர்.  இதேபோல் உடல் தூய்மை இல்லாமல் உள்ளபொழுது போவதில்லை.

நாம் கோவிலுக்குப் போவது சட்டப் பிறச்சினை ( பிரச்சினை) களை எழுப்புவதற்காக அன்று. இறையருளைப் பெறவே செல்கிறோம்.

எப்படிச் சென்றால் அது இறைவனுக்கும் நமக்கும் ஏற்புடையது என்று  இதுநாள் வரை கடைப்பிடித்து வந்தோமோ  அப்படியே சென்று வணங்கி அருள்பெறுவதே நன்றாகும்.  சட்டத்தின் தீர்ப்பினை  நாம் எதிர்த்து நிற்கத்
தேவையில்லை.


கருத்துகள் இல்லை: