திங்கள், 2 மார்ச், 2015

நண்பர் என்ற போர்வை

இன்ப வாழ்வு யாவருக்கும் இயைகின்றதா
அன்பு வாழ்க்கை அனைவருக்கும் அமைகின்றதா
துன்பம் இன்றி வாழ‌ நெஞ்சம் நினைக்கின்றது
தோல்வி யோடு தொடர்பு காணின் உதைக்கின்றது.
பண்பு பாசம் தன்னைப் பணமே சிதைக்கின்றது
பாரில் நேர்மை வாய்மை எதிலே கிடைக்கின்றது?
நண்பர் என்ற போர்வை நாட்டம் காசிலென்பது 
நானிலத்தைச் சுக்கு நூறாய் உடைக்கின்றதே!

கருத்துகள் இல்லை: