ஞாயிறு, 22 மார்ச், 2015

வனதரையர் ( வல்லெழுத்து மிகாமை)



வனதரையர்  என்பது பழந்தமிழ் நாட்டில்  ஓர்  ஆட்சி அலுவலரின் பெயர்.  இதன்  நிலை மொழியானது (first component in the compound word)  "வனம் " என்பது. இதற்குக் காடு, மரங்கள் செடிகள் முதலியன அடர்ந்த நிலப்பகுதி  என்பது பொருள் -   இது நீங்கள் அறிந்ததாகும்.   இதில் வருமொழி (இணைந்த சொல் )  அரையர்,  அல்லது தரையர்.

அரையர்  : அரசர்  அல்லது  அவரின் கீழ்  ஆட்சியாளர் ,
தரையர் : தரை அல்லது நிலம் உடையவ ர்   நிலத்தை ஆள்பவர்   


வனம் + அரையர் = வனவரையர்  ( This is correct outcome but the compound word that comes down to us is not in this form). 

வனம் + அரையர் =  வனத்தரையர் .   இதில் அத்துச் சாரியை உள்ளது.  ஆனால்  வல்லெழுத்து  மிகுவதால்,  அதைத் தொகுத்து,  வனதரையர்  என்று கொள்ளலாம். (கல்வெட்டுக்களில்  இங்ஙனம்  ஒற்றுக்கள்  விட்டு  வருவதுண்டு ).

வனம் + தரையர் =  வனத்தரையர் >  வனதரையர்  (வல்லெழுத்து  மிகுவதால்,  அதைத் தொகுத்து,  வனதரையர்  என்று கொள்ளலாம்.) (கல்வெட்டுக்களில்  இங்ஙனம்  ஒற்றுக்கள்  விட்டு  வருவதுண்டு ). Saving space and labour  in  making stone tablets.)

This term is South Indian and from Tamil  country.  Not Skrt.

வன திரையர் என்று கொண்டாலும்  இத்தொடர்  வலிமிகாதே  பேச்சிலும்  எழுத்திலும்  தோன்றுகிறது.  The same problem manifests itself and the explanations here will apply

திரை என்பது  கடலலையையும்  ஆகுபெயராய்க் கடலையும் குறிக்கும் என்ப .  ஆகையால்   திரையர் என்போர்,  1. கடலாட்சி செலுத்தியோர் என்றோ,  2. கடலுக்கு  அப்பாலிருந்து தென்னிந்தியா / தமிழ் நாட்டுக்குள்  குடியேறியோர்  என்றோ பொருள் படுமென்று  வேறுபடக் கூறுவர்.  நாகரென்று சிலர் ஐயுறுவர்.   இதனுள் யாம் செல்லவில்லை.  வலி மிகுமா  மிகாதா  என்பதும்  மிகுமாயின்  ஏன் சொல்லில் தோன்றவில்லை என்பதுமே இங்கு ஆயப்பட்டது. 

லகரம்   னகரமாய்த்  திரியும்;   இதற்குப் பல எடுத்துக்காட்டுகள்  உள;  ஒன்று:  மேல  > மேன .  தொல்காப்பியச் சொல்.   வலம் என்பதே வனமென்று திரிந்ததென்று கொள்ளலாம்     அங்ஙனமாயின்  போரில் வலிமை காட்டிய என்று பொருள் படலாம் .]\

கருத்துகள் இல்லை: