ஞாயிறு, 15 மார்ச், 2015

இலக்கியக் காதலர் உறவுமுறை

சங்க இலக்கியத்தில் வரும் காதலர்கள்  ஒருவருக்கொருவர்  உறவினர்களா அல்லது ஓர் உறவுமின்றி எதிர்கொண்டு காதலர் ஆனவர்களா ,--   சங்க காலத்தில் எத்தகைய முறை வழக்கிலிருந்தது  என்ற ஒரு கேள்வி உங்கள் மனத்தில் எழுந்ததுண்டா?


அகத்திணை இலக்கியங்களை நோக்குமிடத்து,  தமிழர் காதல் மணம்
புரிந்துகொண்டு வாழ்ந்ததாகவே தெரிகிறது. தாய்தந்தையரை அணுகி முறைப்படி பெண்பார்த்தபின் தலைவியைச் சந்தித்து காதலை வெளிப்படுத்திய நிகழ்வு எதையும் சங்க இலக்கியத்தில் இதுவரை படித்ததில்லை. எங்கேனும் இருக்கலாம். இருப்பின்  மிக அருகிய நிகழ்வாகவே அது இருக்கும் என்பதென் ஊகமாகும். பாரி மறைந்தபின் அவன் மகளிருக்கு மாப்பிள்ளை பார்த்து கபிலர் தொல்லைப்பட்டதுபோல் நிகழ்வுகள் உள.


சாதி முறைகள் நடப்பிலிருக்கும் ஒரு குமுகாயத்துக்கு ( சமுதாயத்திற்குக் )  காதல் மணமுறை இணக்கமுடையதன்று. காதலாகிறவன் எந்தச் சாதியானாகவும் இருக்கலாமாகையால், பின் அது இடர்தருவதாகிவிடும்  என்று  தெரிகிறது   ,

தற்போதுள்ள நடைமுறையில் முன்பின் பழகியிராத ஆடவர்  பெண்டிரிடையே தரகர் மூலமாய்த் திருமணம் உறுதி செய்யப்படுகிறது. இது வேறு படும் இடங்களும் உண்டு. இது பாதுகாப்பான நடைமுறை என்று பெற்றோர் நினைக்கின்றனர். சங்க காலத்து நடைமுறைகள் காதலன் கைவிடுதல் போன்றபல நிகழ்வுகள் நடைபெற்றதாலேயே வழக்கொழிந்தது  என்று தெரிகிறது.  இதற்கு ஆதாரங்கள் ஏதும் கிடைத்தில.

 இதனை நீங்கள் ஆய்ந்ததுண்டாயின், இங்கு நம் நேயர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வருமாறு அழைக்கிறோம்.











கருத்துகள் இல்லை: