புதன், 18 மார்ச், 2015

first the mantras then the language

In "Rules without Meaning" Staal controversially suggested that mantras "predate language in the development of man in a chronological sense". He pointed out that there is evidence that ritual existed before language, and argued that syntax was influenced by ritual.
Wikipaedia.

மந்திரங்களே  முதலில் தோன்றின;  பின்னரே மொழி  அமைந்து அது பண்படுத்தப் பட்டது  என்றார் அறிஞர் ஸ்டால்,  இந்தப் பேராசிரியரின் கருத்து  ஒரு சில மொழிகட்குப் பொருந்துவதே ஆகும் . இவற்றுள்ளும்  சமஸ்கிருத மொழிக்கு  அது முற்றிலும் பொருத்தமானது  ஆகும் . .

மந்திரங்கள்  சொல்லிப் பிழைப்பவர்  எடுத்த எடுப்பிலேயே  கோட்டை கொத்தளங்கள்  அரண்மனைகள் முதலிய வற்றுக்குள்  நுழைந்து மேலாண்மை செலுத்தினர் என்று நினைப்பது  உலக இயல்பு  அறியாத முட்டாள்தனமாகும் .  பல மரத்தடிகளில் தங்கி அலைந்து திரிந்து  எப்படியோ ஓர்  அரசனைச் சந்திக்க இயலும்போதுதான்  மந்திர மொழிஞருக்கு   ஆகூழ்  ( அதிருட்டம்)   அடித்துவிட்டது என்று பொருள் . அரசனிடம் மந்திரம்  படித்து  அரசனுக்கும்  அதன்பின்  நல்லது நடந்து  மந்திரம் சொல்பவன்பால் பற்றுமிகும்போதுதான்  சீரான நிலை ஏற்படுகின்றது.

இதன்பின்  பல்வேறு   மந்திரங்களையும்  இணைத்து நோக்கி  பாணனாகிய பாணினி போல் ஒரு படித்தவன்  சில இலக்கண விதிகளையாவது  இயற்றித் தரும்போதுதான்  மொழியானது  அமைப்பு நிலையை அடைகின்றது/  இப்படி  அமைந்ததுதான் சமஸ்கிருத மொழியாகும் 

பேச்சில்  வளர்ந்த மொழிக்கும்  மந்திரங்களிலிருந்து  அ மைந்த மொழிக்கும் வரலாறு  வேறுபடும்   இதைத்தான் ஸ்டால்  எடுத்துச் சொன்னார் ;   ஆனால்  விளக்கம்  கேட்டோர்  அதனை நன்கு  புரிந்துகொள்ளவில்லை  போலு ம்.  அதனால்  அப்போது  அதைப் பலர் ஒத்துக்கொள்ளவில்லை .  

மந்திரத்தில்  விளைந்த மொழியே  இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம்  தாயாகிவிட்டது  என்பதை  மேலையர் எப்படி  ஏற்றுகொள்வார்கள் ? அவர்கள்  அதை  ஏற்காதது  எதிர்பார்ப்புக்குரியதே.

மந்திரப் பாடல்கள்  திரட்டப்படும் போது, விடப்பட்டவையும்  இறந்தவையும் பல என்று ஆய்வாளர்கள்  சிலர் சொல்வர்.  எஞ்சியவையே  இருக்குவேதம் ஆயிற்று.

இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் பல்வேறு சாதியினர்.  எந்தெந்தச் சாதியினர் என்றோ  என்னென்ன மொழிகள்/ கிளைமொழிகள்  பேசினர்  என்றோ  தெரியவில்லை. மந்திரம் சொல்வதில் வெளியிலிருந்து வந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டனர் என்று கூற எந்த ஆதாரமும்  இல்லை. ஆனால் அவர்களிடம் வழங்கிய சொற்கள் பலவற்றைக்கொண்டும்  பாகத மற்றும் திராவிட, முண்டா மொழிகளின் சொற்களைக்கொண்டும்  ஒரு புதிய மொழி உண்டாக்கிப்   பல சொற்கள் தொலைந்துவிடாமல் காப்பாற்றப் பட்டன.  அதுவே  சமஸ்கிருதமாகும். 

பாணினியின் அஷ்டாத்தியாயி  என்றால்  எட்டு அத்தியாயங்கள் உடைய நூல் என்று பொருள்.  அட்ட என்பது  எட்டு என்பதன் திரிபு,   ஆங்க்கிலத்தில்கூட எய்ட் என்ப து எட்டு என்று பொருள்   
இலத்தீன்  "அக்டோ"  = எட்டு.   ஒவ்வொரு அத்தியாயமும்  அற்று,  அதன்பின் வருவதனோடு  இயைகின்றது.   அற்று என்பது  அத்து  என்று திரியும்.  பேச்சுத் திரிபு .அத்து+இயை +அம்  = அத்தியையம்  > அத்தியாயம் ஆனது.  இச்சொல்லின் தமிழின் பங்கு காணலாம் -  அது பெயரிலேயே வந்துவிட்டது.  பாண்> பாணன்;    பாண் >பாணினி..  பாண் >பாணர். அப்போது திராவிடர்கள்  நாவலந்தீவு  முழுமையும் பரவிக்கிடந்த காலம்.  வந்தவர்கள்  பல திராவிடச் சொற்களையும் முண்டா மொழிச் சொற்களையும்   ஆஃப்ரோ ஆசிய மொழிச் சொற்களையும்  கற்றுக்கொண்டு பயன்படுத்தினர்.  பின் இவையெல்லாம்  பண்படுத்தப்பட்டதே சமஸ்கிருதமாகும். 
We are just telling you how the terms were formed.  Whether we interpret it in this way or in any other way, you will be still using them  when referring to them.. Therefore your usage or otherwise is not affected by our interpretation. We have served only to make things clearer to you.



கருத்துகள் இல்லை: