ஞாயிறு, 1 மார்ச், 2015

வெள்ளப் பெருக்கினால்

அள்ளா இயற்கையால் ஆழ்கடல்போல் சேர்ந்துவிட்ட 
வெள்ளப் பெருக்கினால் வேதனைக்குள் ---- தள்ளப்பட் 
 டெல்லா மிழந்துதவிக் குங்காசு மீரினைச் 
சொல்லால் தேற்றொணாத் துயர்.

வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்திய இயற்கை அன்னை  அதை அள்ளி அப்புறப் படுத்தவில்லை. ஆகையால் "அள்ளா  இயற்கை"  எனப்பட்டது.

காசுமீர்ப் பகுதியில்  சில மாதங் கட்கு  முன்  ஒரு பெரிய வெள்ளப் பெருக்கு  ஏற்பட்டது.  

கருத்துகள் இல்லை: