வியாழன், 11 செப்டம்பர், 2014

பிரேமையில் யாவும் மறந்தேன்.


இது பல இனிய பாடல்கள் தந்த பழம்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பாட்டின் தலைப்பு  . இது.பாட்டுக்கு நல்ல வரி; இப்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு, வேலைக்குப் போவதையும் துறந்துவிட்டுத் திரிந்தால், இக்காலத்தில் நிலை நிற்க முடியாது. பெண்களின் உழைப்பில் குடும்பங்கள் பல வாழ்கின்றன.

பிரேமை என்பது தான் என்ன? இதை விளக்கும் கதைகள், கட்டுரைகள்,  காவியங்கள், ஓவியங்கள் பலப்பல. பிரேமையை விளக்குதல் எம் நோக்கமன்று.

மனிதன் குகைகளில் வாழ்ந்த தொல்பழங்காலத்தில், ஒரு குகையில் உள்ள பெண்ணை அதே குகையில் வாழ்ந்த அவள் குடும்பத்தார், அடுத்த குகைக்காரர்கள் வந்து தூக்கிக் கொண்டுசென்று விடாதபடி பார்த்துக்கொண்டனர். அதாவது அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்தனர். 


குடும்பம் கொடுத்துவந்த காவலை. வந்து அவளை விரும்பியவனும் இப்போது கொடுத்து அவளை மேலும் காத்தான்.  அவள் வேறு எங்கும் சென்றுவிடாதபடி
காப்பதும் வேறுயாரும் தூக்கிச்சென்றுவிடாதபடி காப்பதும் என இவை யாவும் பிறவும் செய்வான், ஆகவே. கா (காவல்) என்ற கருத்திலிருந்து  கா > காதல்; கா > காம் > காமம் என்பவை எல்லாம் அமைந்து வழங்கின.
பிரேமையில் மற்றவற்றை மறந்துதானே ஆகவேண்டும்?

பிரேமை என்பதென்ன?  ஏம் என்பது காவல். பாதுகாப்பு என்று பொருள்தரும்.
ஏமம் என்பதும் அதுவே. அம் விகுதி பெற்றது.  ஏமை என்பது, ஏம்+ ஐ சேர்ந்த சொல்.  ஐ ஒரு விகுதி. பிற குகையிலிருந்து வந்து அவளைக் காத்தலால், பிற காவல் ஆகும் அது.  பிற+ ஏமை = பிர + ஏமை ‍= பிரேமை.
பிற என்பதைப் பிர என்று திரித்தல், ஒருதிறனே ஆகும்.

சில சொற்கள் தம் ரகர றகர வேறுபாட்டை இழந்துவிடும், அதுவும் சொல்லாக்கத்தில்,  உண்மை.
 கருப்பு ‍ கறுப்பு.
 காரல் ‍ காறல்.
 தருவாய் ‍ தறுவாய்.

இவற்றில் ரகர றகர வேறுபாடின்மை அறிக.

பிரேமை என்பது தமிழ் மூலத்தில் அமைந்தது. தமிழ் மூலங்கள் பிற மொழிகளில் சொல்லாக்கத்திற்குப் பயன்பட்டுள்ளன .

பிரேமை  என்ற சொல்லை  இருக்கு வேதத்தில்  தேடிப்பாருங்க்கள்

குறிப்பு:  கவர்தலும் காத்தலுடன்  .தொடர்புடையதே .மற்றும் காதல் தன்வினை வடிவிலும் காத்தல்  பிறவினை வடிவிலும் இருத்தலைக் காணலாம்..

புதன், 10 செப்டம்பர், 2014

Constitutional Law, Practical Politics, interesting.

வல்லு நர்  சொல்வதனால்`--  இதை நாம் 

வாய்திறந்து  கேட்டிருப்போம் !

சொல்லுவது ஆனபின்னே ---- நலன்கள் 

சூழ்பயன் காத்திருப்போம்.

=========================================

No reason for Sultan to go beyond Pakatan nominees for MB, experts say

KUALA LUMPUR, Sept 10 — The Sultan of Selangor has no cause to consider candidates beyond Pakatan Rakyat’s (PR) nominees to be mentri besar post as the pact is not legally obliged to offer more than one name for the position, said legal experts.

According to lawyer Syahredzan Johan, picking a candidate from those not nominated by the pact would also result in the added complexity of the individual first needing to demonstrate evidence of majority support in the state legislative assembly.
“So the Sultan, for example, cannot pick a candidate that is not supported by the majority,” Syahredzan told Malay Mail Online on Tuesday.
“Also, there is absolutely no requirement to submit more than one name,” he added.
On Tuesday, Sultan Sharafuddin Idris Shah said he will not limit the search for Tan Sri Khalid Ibrahim’s replacement to those nominated by PKR, DAP and PAS, after expressing displeasure at the first two parties for only naming Datuk Seri Dr Wan Azizah Wan Ismail.
The ruler said the act was in defiance of his request that each of the three parties present at least three nominees for his consideration.
According to constitutional law professor Dr Abdul Aziz Bari, however, it was unnecessary for the Sultan to seek additional candidates when the PKR president has secured the numbers needed to demonstrate her level of support.
“To me, asking for names after Wan Azizah has 30 majority is wrong,” Abdul Aziz told a forum on Tuesday.
Thirty Selangor assemblymen — all 28 from PKR and the DAP as well as two from PAS — had signed statutory declarations (SDs) in support of Dr Wan Azizah, comprising the majority of the 56-seat legislative assembly.
Abdul Aziz added that the Sultan’s discretion in selecting the MB only arose in cases where it was unclear who commanded majority support, which was not the case in Selangor as Dr Wan Azizah has support from 30 assemblymen through their SDs.
“No such thing as the Palace has absolute power to appoint,” said the law professor
Abdul Aziz stressed that the royalty does not have an active role in modern politics as Malaysia is a parliamentary democracy that practises a constitutional monarchy system.
“Before Merdeka, it is true that the Sultan had absolute discretion to appoint the MB, but after Merdeka, that no longer existed. The MB is no longer appointed by the Sultan and is installed according to the majority and is responsible to the House,” said the law professor.
He pointed out that the Yang diPertuan Agong did not ask for more names when Tun Abdul Razak succeeded Tunku Abdul Rahman as prime minister, or when Tun Dr Mahathir Mohamad replaced Tun Hussein Onn.
The Sultan last month asked the PR parties to name “more than two” candidates each to resolve the crisis triggered by PKR’s bid to install Dr Wan Azizah in place of Khalid.
Despite this, PKR and DAP both kept to Dr Wan Azizah alone.
PAS had initially submitted two names — Dr Wan Azizah and PKR deputy President Azmin Ali — but this was superseded by a list of three undisclosed names personally submitted by PAS president Datuk Seri Abdul Hadi Awang late last week. 

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

Prabakaran

சண்டைவிட்டுச் சரண்புகுந்த பிரபா நல்லோன் ‍‍---கைதி
சாக்குழியுள் வீழ்த்தினவன் என்ன மாந்தன்?
குண்டைவிட்டுக் கொலைபுரிந்த கூன்மூளைக்குள் ---ஒரு
குணமிகுந்த நெஞ்சிரக்கம் தோன்ற லுண்டோ

கப்பலொன்றைத்  தீவுக்குச் செலப்பணித்து---- ‍‍‍உயிர்கள்
காப்பாற்ற முயன்றவம ரிக்கர் மேலோர்  
செப்பலுண்டே இதயமென்றே இல்லை ஆயின்--- ‍‍அன்னோன்
செய்ததெலாம் வன்கொடுமை சீர்கேடன்றோ.

Kashmir floods


அள்ளா இயற்கையால் ஆழ்கடல்போல் சேர்ந்துவிட்ட‌
வெள்ளப் பெருக்கினால் வேதனைக்குள்--- ‍‍‍ தள்ளப்பட்டு,
எல்லாம் இழந்தார்  இடர்பெரிதே  காசுமீரம்
சொல்லால்தேற் றொண்ணாத்  துயர்.

இவ்வளவு நீரையும்  இயற்கை  கொஞ்சம்  கொஞ்சமாய்   எடுத்து  மேகங்க்களாக்கி  வேறிடங்களில்  பெய்திருக்கவேண்டுமே :  அதனால்  "அள்ளா  இயற்கை ".

திங்கள், 8 செப்டம்பர், 2014

மலேசியா தேர்ந்த நாடே!

அரசினரின் தொல்லைகளோ ஒன்றும் இல்லை;
அழகான நல்லமைதி ஆர்க்கும் நாடே!
வெறுசினத்துக் கொள்ளைஎனில் ஒன்றி ரண்டு!
வீணர்சிலர் நிகழ்த்துவன  எங்கே இல்லை?
தருகனத்த ஊர்க்காவல் தாக்கம் கட்டும்!
தக்கபடி மக்களாட்சி ஊக்கிச் சுட்டும்;
திருகனத்த மலேசியா தேர்ந்த நாடே!
தேடினிது  போல்சிலவே ஞால மீதில்.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

" பாதுகையே துணையாகும்"

இனி பாதுகை என்னும் சொல்லைக் காண்போம், இச்சொல் இப்போது பொதுப்புழக்கத்தில் இல்லை.

கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறவள், வெளியில் கிடக்கும் செருப்புக் கடலில் தன்னுடையதைத் தேடும்போது, "செருப்பை எங்கு போட்டேன் என்று தெரியவில்லை" என்கிறாள். "பாதுகையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்பதில்லை.  ஆனால் இராமர் பற்றிக் கூறுகையில்,  " பாதுகையே துணையாகும்" என்கிறோம்.  சிலவிடங்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த  முடிகிறது.

பாதுகை என்பதில் முன் நிற்பது பாதம் என்பது, பாதம் காலணியை உகக்கிறது.
அதாவது காலணியை அணிய விரும்புகிறது,  அணிகிறது.

பாத(ம்) + உக + ஐ = பாத் + உக + ஐ  ‍= பாத் +  உக் + ஐ  = பாதுகை.

மகர ஒற்று, அகர ஈறு, மீண்டும் அகர ஈறு முதலிய கெட்டன.  

ஐ விகுதி .

பாதமென்பது கால் தரையில் பதியும் பகுதி என்பது.  பதி + அம் = பாதம்,  எனின் முதல் நிலை திரிந்தது  அம் விகுதி பெற்றது. 

ஈரல்

நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகள் பல, அவற்றுள் ஒன்று ஈரல் ‍மூச்சை உள்ளிழுக்கும் செயலைச் செய்கின்றது; இன்னொன்று அரத்தத்தை உள்ளிழுக்கும் (இழுத்து வெளியில் இருக்கும் குழாய்களில் செலுத்தும் ) வேலையச் செய்கிறது.

ஈரல் என்ற பெயர் ஏற்படக் காரணம் உள்ளிழுக்கும் செயல்தான். ஈர்த்தல் -  உள்ளிழுத்தல்.ஈருள் 

ஈர் >  ஈர்த்தல்;
ஈர் >  ஈரல்  (அல் விகுதி}
ஈருள்  :  ஈர்  + உள் (உள் விகுதி)


தமிழில் வழங்கும் இருதயம், இதயம் என்பனவும் இவ்வடியினின்றே தோன்றியனவாம்.

ஈர் > ஈர்+ து + அ + அம்=  ஈர்தயம் >  இருதயம்  > இதயம்.
ஈர் என்பது இர் என்று குறுக்கம் பெற்றது.
து என்ற அஃறிணை விகுதிச்சொல் இங்கு சொல்லாக்க இடைநிலையாய் இடப்பட்டுள்ளது.
அ என்ற சொல்லாக்கச் சாரியை இடப்பட்டுள்ளது.
அகரத்துக்கும் இறுதி அம் விகுதிக்குமிடையே உடம்படுமெய் யகரம் முளைப்பது இயல்பு.

இஃது திறம்பட அமைக்கப்பட்டுள்ளது.
இதயம் என்பது இருதயமென்பதன் இடைக்குறை.

அறிந்து ஆனந்தமடையுங்கள்.

டி. ஆர். மகாலிங்கம் ‍ டி. ஆர். ராஜகுமாரி. (இதய கீதம்).

டி. ஆர். மகாலிங்கம் ‍  டி. ஆர். ராஜகுமாரி. (இதய கீதம்).
======================================================

இவர்கள் பாடிய ஒரு பழைய பாட்டு மிக்க இனிமையாய் இன்னும் விரும்பப் படுவதாய் உள்ளது. அந்தப் பாடலைக் கம்பதாசன் என்னும் புகழ்பெற்ற கவிஞர் எழுதியிருந்தார். பாடல் வருமாறு:

X :வானுலாவும் தாரை நீஎன் இதய கீதமே.

Y :ஆனந்தமே என் ஜீவனாகும் இதய கீதம் நீயே.

X:அழகாய் அலைமோதும் கடலின் அமுதமாகும் உன் மொழியே.

Y:ஆசை ஜோதி வீசும் அருணோதயம் உன் விழியே.

X & Y: ஆனந்தமாக நாமே அன்பாகப் பாடுவோமே.

X: வீசும் தென்றல் காற்றினிலே
விந்தை மேகம் போலே!

Y:  நீல வாவி மீதே
நீந்து மனம் போலே.

X: காதல் நாடும் வண்டின்
கான இன்பம் போலே

X & Y: ஆனந்தமாக நாமே அன்பாகப் பாடுவோமே.

வாழ்விலே நம் ஜீவ பாக்கியம்  இதய கீதமே.

இதிலுள்ள கருத்துகள் ஆழ்பின்னலாக இல்லாமல் எளிமையாகவே உள்ளன.
திரைப்பாடலுக்குரிய தெளிவுடன் உள்ளது. இந்தப் பாடல் கிட்டினால் கேட்டு  மகிழுங்கள்.

இதில் பிழைகள் இருப்பின் தெரிவியுங்கள். நன்றியுடன் திருத்திக்கொள்வேன்.



ONAM greetings

மாவலியும் வந்தார்   நம் மக்கள் காண‌
மக்கள்கண்டு மாவலியை வருக என்று
தாவிலதாய்த் தாள்பணிந்து பாடி ஏற்றார்.
தக்கபணி விடைசெய்தார் அதுவாம் ஓணம்!
நோவிலராய் நொடியிலராய் வாழ்க வாழ்க‌
நூலறிவும் நுவலறிவும் உயர்ந்து வாழ்க!
காவலுற வளர்கமலை யாளி மக்க்ள்
கனிந்துமனம் வாழ்த்துகிறேன் சிவமா லாவே.

மாவலி  -  ஓர்  பழங்கால  மாமன்னர்.  தாவிலதாய் =  தூய்மையோடு .. குற்றமொன்றும் இன்றி.

சனி, 6 செப்டம்பர், 2014

Soweto (South Africa)

நெல்சன்  மண்டேலா பெருமகனார் தங்கியிருந்த  இடங்களில்  இதுவும் ஒன்று.  "சொவெட்டோ "  என்பது.

பல சொற்கள் இலக்கணக் காரர்கள் கண்டுபிடித்துச்  சொல்லிய முறைப்படி அமைவதில்லை. பகுதி விகுதி சந்தி  இடைநிலை  சாரியை  என்ற போக்கில் உருவாவதில்லை.   வெளி நாட்டுச் சொற்களிலும் இவ்வுறுப்புகள் வரக்காணலாம்.

சொவெட்டோ என்பது South Western Townships என்பதன் குறுக்கம்.(1)
 இது குறுக்கச் சொல் ஆதலின் இதைப் பகுதி விகுதி என்று பிரித்து உண்மை காண இயலாது.

இதுபோலவே நாம் வழங்கும் பல சொற்களிலும் நிலவுதலைக் காணலாம். விவாகம் என்ற சொல் இப்படிப்பட்டது என்பது முன் கூறப்பட்டது.  வி  = விழுமிய;  வா - வாழ்க்கை ;  கம்  -  ஆகு+ அம் > ஆகம் > கம். ஆனால் இதற்கு வேறு உருவாக்கம் சொல்வதும்  ஒரு   திறமைதான்.

இப்படிச் சுருக்கி அமைத்தவை பல. 

குறிப்புகள் 

1. NELSON MANDELA,  The Long Walk to Freedom, (2013), p.143.   

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

News and comment

செய்தி :  நீரிழிவில்  கால்போன நோயாளியின் வீட்டுள் புகுந்த தெருநாய் அவரைக் கடித்துக் குதறியது. வீடு 5-வது மாடியில். 

* பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்  என்பதை எண்ணும்போது, இது நம்மையும் துயரத்தில் ஆழ்த்துகிறதே ! 

செய்தி: சீனப்   புத்தர் ஆலயத்தில் உண்டியல் பணம் திருட்டு!

* திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. பட்டுகோட்டையார் பாட்டு.

செய்தி:  நிலாய்  வட்டாரத்தில் செம்மண் கலந்த குடி நீர் பகிர்ந்தளிப்பு . * ஒட்டகங்கள் இருக்கும் ஊருக்குப் போகவேண்டிய நீர். முகவரிக் குழப்பம்.

செய்தி: அரண்மனைக்குள் அத்து மீறி நுழைந்து,  நாற்காலியில் அமர்ந்து 
தொலைக்காட்சி  பார்த்தான், வழிப்போக்கன் !
நீதி மன்றத்தில் "அது அரண்மனை என்பது தெரியாது"  என்றான்.

*  நீ திபதி ஜெஸ்ஸிக்கா  தாமஸ்:  அது  வீடாக இருந்தாலும் அதே .குற்றம்தான்.

(தாளிகைச் செய்திகளும் நம் கருத்துரைகளும்.)  5.9.2014





Hackers have made some changes to this post, causing some spelling errors.  We have restored as per
original.  No spell errors now   .

If errors crop up again please inform us through the comments feature.

சங்கம்

சென்ற இடுகையில், "த்து" என்பது "ச்சு" ஆவதைக் கவனித்தோம்.

தகரம்  சகரமாவது, சொல்லில் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரலாம்.

இதைப் பாருங்கள்.

அப்பன் > அத்தன் > அச்சன்.

இங்கு மொழி இடையில் "த்த" என்பது "ச்ச" ஆயிற்று. இங்கு மொழி என்றது சொல்லை.

மொழி முதலிலிலும் இத்திரிபு வரும்.

சங்கப்புலவர்கள் மதுரை சென்று புலவர் கூட்டத்தில் கலந்துகொண்டு, கவி பாடி அரசனிடம் பரிசில் பெற்றனர். அப்போது அவர்கள் அங்கு தங்கி
 அரசன் அளித்த உணவை உண்டு மகிழ்ந்து, அவையிலும் பங்கு பற்றினர். உடனே திரும்பிவிட அப்போது வானவூர்திகள் ஏது?  மகிழுந்துகளும் இல.
ஆகவே தங்குதற் கருத்திலிருந்தே சங்கம் என்ற சொல் உருவாகிற்று.

தங்கு > சங்கு. 
இது ஊர்ந்திடும் ஒரு சிற்றுயிரி தங்கி வாழும் கூடு குறித்தது.

தங்கு > சங்கு > சங்கம் :  சங்கு.

சங்கு > சங்கம் = புலவர்கள் தங்கிக் கவிபாடிய இடம், புலவர் கூட்டம்.

சமைத்தல் என்பது தமிழே. இதன் அடிச்சொல்  சம் என்பது.  சம்> சமை.

அமை > சமை. சமைத்தலாவது, உண்பொருள்களைக் கூட்டி ஆக்குதல்.

சம் > சம்+கு > சங்கு > சங்கம்.

அம் > தம் > சம்.

தம் > தம்+கு > தங்கு.

உயிர் முதலானது, உயிர்மெய் முதலாகத் திரிதல், பெருவரவு ஆகும்.

இப்போது விரித்துரைக்காது இவற்றை மட்டும் அறிந்தின்புறுவோம்

This has been explained before to some extent..  

வியாழன், 4 செப்டம்பர், 2014

சில சுவையான திரிபுகளை....



இப்போது, சில சுவையான திரிபுகளைக் கவனிப்போம்.

வினை முற்றுக்களில் வரும் திரிபுகள். இவற்றில் "ற்று"  என்பது "ச்சு" ஆகிவிட்டது.

ஆயிற்று > ஆச்சு,
போயிற்று > போச்சு.

வினை எச்சங்களில் வரும் திரிபுகள்.  இவற்றில் "த்து" என்பது "ச்சு" ஆவது
காணலாம்.

தேய்த்து >  தேச்சு.
வாய்த்து >  வாச்சு.
ஏய்த்து > ஏச்சு.
காய்த்து > காய்ச்சு
அடித்து > அடிச்சு.
கடித்து  > கடிச்சு.

இவைபோன்ற திரிபுகள் மலையாள மொழியில் வினைமுற்றுக்களாய் வரும்.

சொல்லாய்வில் இவைபோலும் திரிபுகளைக் கவனிக்கவேண்டும்.

வீதியிலே நடக்கின்ற வேளை...

வீதியிலே நடக்கின்ற வேளை பார்த்து
விதிமுடிய நேர்ந்ததெனப் பேசும் வண்ணம்
சூதறியா நேரியர்கள் தம்மைக் கொல்லும்
சுடர்விளக்கின் உந்துகட்கோர் கட்டு வைக்கும்
தீதிலதாம் நெறியொன்றே இந் நாள் காறும்
தெரிந்தபெரு மனிதர்களும் கண்டார் இல்லை!
யாதுவழி உயிரிழப்பு குன்றச் செய்ய?
யாமறியோம் தேமருவும் மேலாம் வாழ்வில்.  

புதன், 3 செப்டம்பர், 2014

உளுந்தே இல்லாத தோசைபோட்டு

உளுந்தே இல்லாத தோசைபோட்டு
ஒருபயனும் இல்லாமல் விறகேபோல‌
விழுந்தே உண்கின்றார் வேலைபார்ப்போர்
வேறுவழி இல்லாமல் ஐயோபாவம்!

அரிசிமாவில் ஆட்டாவைக் கலந்துவிட்டார்.
அடிப்பிடிக்க மாட்டாதாம் அடித்துச்சொல்வார்.
வரிசையிலே நிற்கின்றார் அதனையுண்ண!
வந்த நாட்டில் தாயில்லை அதனாலன்றோ!

கட்டியான இட்டிலியோ கண்ணராவி
கருகிவீசும் பழஞ்சாம்பார் என்னசெய்ய!
விட்டகன்று நல்லுணவு தேடியுண்டால்
விதவிதமாய் நோய்களுமே வாராதையா.

தொண்டை மண்டலம்


தொண்டை என்பது பல்பொருளொரு சொல். தொண்டைமான் என்பது ஒர் அரசனின்  பட்டப்பெயர். அவன் ஆண்ட மண்டலம் தொண்டை மண்டலம் என்றும் தொண்டை நாடு என்றும் பெயர் பெற்றது.

நாம் ஆய்வதற்குரியது "தொண்டை" என்னும் சொல்.  "அன்பில் நாடு ஒன்பது குப்பம்" என்று ஒரு தொடர் வழங்கி வருவதாலும், இதுவும் தொண்டைமான் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாதலாலும், ஒன்பது என்று பொருள்படும் "தொண்டு" என்ற பழந்தமிழ்ச் சொல்லிலிருந்து "தொண்டை" என்ற நாடு குறிக்கும் சொல் தோன்றியிருத்தல் கூடும்.

தொள்> தொள்+து > தொண்டு.
தொள் > தொள்ளாயிரம்.
தொள் > தொள்+  நூறு = தொண்ணூறு.
தொள்+பது > தொண்பது > ஒன்பது. (இது தொண்டு என்ற பழஞ்சொல் வழக்கிறந்ததனால் அதற்குப் பதிலாக முளைத்த திரிபு).
தொண்டு (மேல் காண்க) > தொண்டை.

அன்பில் நாடு : இது அம்பு நாடு, அன்பு நாடு என்றும் வழங்கும்

அழும்பு  >  அழும்பில்  (அழும்பு +இல் ).   எதிர்ப்பு  கிளர்ச்சி  முதலிய இல்லாத  எனினுமாம்..    அழும்பில் > அம்பில் > அன்பில்.
அழும்பு+ இல்  =  வேந்தனுடன் ஒத்துப்போகும்  ஆட்சியாளர் என்றும் ஆகும்.

azumpu-tal to be intimate, in communion.
 (  

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

the Malaysian Judiciary

அரசினிடம் சம்பளத்துக்கு அமர்வதென்றால் எளிதாமோ?
உரசியுரசிப் பார்த்துப்பொன் உண்மைகாணல் அதுவேபோல்
குறைசிறிதே இருந்தாலும் கூடாதிதென் றொதுக்குவரே 
வரைகடந்த பெரும்பதவி எதுவெனினும் இதுநிலையே


Story by Shaila Koshy
The Chief Justice is trying to narrow the gap in quality between his judges. Stuck with those he inherited, Tun Arifin Zakaria has set up a training institute for High Court judges and is not elevating non-performing Judicial Commissioners.
During the opening of the legal year in 2012, Tun Arifin Zakaria reiterated the promise he made on Sept 11, at his elevation to Chief Justice: “to transform our Judiciary into a world-class Judiciary.”
In an interview with The Star at the Palace of Justice, Arifin spoke candidly on his blueprint for the judiciary and how improving this branch of Government included pruning the non-performers.
There is now a Judges Training Institute under the auspices of the Judicial Appointments Com­mission (JAC) of which he is chairman.
Arifin said judges determined the curriculum for High Court judges and Judicial Com­missioners (JCs).   
The Star page 26-27    3rd Sep 2014

பண்ணுறுநல் பாப்புவாவைப் பார்த்தல் இன்பம்


எண்ணூறு மொழிபேசும் இனிய மக்கள்,
இறந்துவிட்டால் ஏதுமிங்கு உரைத்தல் ஆகா(து)
உண்ணுவதும் உறங்குவதும் எளிய வாழ்வும்
உயர்வான புன்னகையில்  தெரிய லாகும்.
கண்ணினையே கவருமெழில் நாட்டின் நட்பைக்
காட்டிநிற்பர் கவலையின்றி நியுகி  னீயில்
பண்ணுறுநல் பாப்புவாவைப் பார்த்தல் இன்பம்
பயன்பெற்று மகிழ்வோங்கும் சென்று காண்பீர்.


http://www.dailymail.co.uk/news/article-2658357/Humans-Papua-New-Guinea-The-incredible-pictures-capture-troubled-island-nations-vibrant-spirit-amid-hardship-poverty.html

http://www.dailymail.co.uk/news/article-2658357/Humans-Papua-New-Guinea-The-incredible-pictures-capture-troubled-island-nations-vibrant-spirit-amid-hardship-poverty.html

Some people have had undesirable experiences there. But this can happen in any country.  

தூண்டாத விளக்கென்றால்.........

வேண்டாத எலிபற்றி எழுதி வைத்து
விடுமுறைக்குச் சென்றுவிட்டு இங்கு வந்தேன்!
தூண்டாத விளக்கென்றால் அதுநான் என்றால்
தோன்றுவது தற்புகழ்ச்சி ஈன்றாள் வைவாள்!
ஈண்டுவரும் இணையத்துத் தோழர்  என்றும் 
இதற்காகக் கோபிக்க மாட்டார்  என்னை!
தாண்டியொரு நாள்சென்றால் தக்க தான‌
தமிழ்விளக்கம் தந்திடுவேன் வந்து காண்பீர்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

Naughty mouse, I caught you!

குறும்பு எலி

கூரையின் கீழடைப்பில்
குடுகுடு என்றே  ஓடினாய்.
யாருமுனை வெறுத்தொதுக்க‌
கீச்சுக் கீச்சென்று கத்தினாய்!
குளிரூட்டியின் வெளிக்குழாயைக்
குறுகுறு என்று கத்திக்கொண்டு
நள்ளிரவும் பார்க்காமல்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍----
சுள்ளியென்று நினைத்தாயோ
கடித்துக் குதறிவிட்டாய்.

பொறிவைத்தேன் மாட்டிக்கொண்டாய்.
பரிவுபெறும் பார்வை ஏனோ?
அதிகாலை உனைக்கொண்டுபோய்
ஆற்றங்கரையில் எறிந்திடுவேன்.
கொல்லமாட்டேன், அஞ்சாதே.
வினாயக ச‌துர்த்தி இன்று.
வினை ஆயவை விலக்கிடுவேன்.
வினை ஆயகத் தலைவன் அவன்.
எனையும் அவன் ஆயவிடேன் 
வினா எழ இடங்கொடாமல்
உனைத் தொலைவில் சேர்த்திடுவேன். 

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

காணாத ஞாலமே Poet F Thompson

காணவும் இயலாத ஞாலமே ‍‍‍‍--- நீ எம்
கண்களில் படுகின்றாய்;
தொடவும் அமையாவிப் பாரிடமே ---அண்டித்
தொடுதலும் அடைகின்றோம்!

அறியவும் இயலா உலகுனையே ---- யாம்
அறிந்தே நடக்கின்றோம்;  ‍‍
அறியா நிலையில் யாமுனையே ‍---- இறுக‌
அணைத்துக் கிடக்கின்றோம்,

******

மாகடல் மாந்திட மீனெழுமோ‍‍----காற்று
மாறறி கருடன் தாழுறுமோ?
மேகத்து மிசைமினும் மீன்களையே‍---கேட்போம்
மேலிருப்பானோ  நீலவானில்?
ணா 



குறிப்புகள்:

ஞாலம் -பூமி       அமையாவிப் பாரிடம் --  இயலாத இந்தப் பூமி,
அண்டி - (உன்னை) அணுகி .
மாந்திட  - to experience; to enjoy or indulge.  
எழுமோ -  to soar  above,  பறத்தல் போல் மேலே உயர்தல்.
காற்று  மாறு  அறி கருடன் -  காற்றின் வீசும் திசை அறியும்  கருடன்.
கீழுறுமோ -  கீழே இறங்கி  அதை அறியுமோ?  (எ-று ). 
மிசை  -  மேலே .  மினும் =  மின்னும்   மீன்களையே -  நடசத்திரங்க்களையே.
மேலிருப்பானோ  நீலவானில்?   -  இந்த நிகழ்வுகளுக்கெல்லாம்  மேலே  நீல வானுக்குள்  அவன் (கடவுள்)  இருக்கின்றானோ?

பூமியில்  நமக்குப் புரியாத பல நடக்கின்றன.  அதில் நாமும்  அறிந்தோ அறியாமலோ  இணைந்து கிடக்கின்றோமே! இவையெல்லாம்  நடத்திக்கொண்டு  இறைவன் மேலிருக்கின்றனோ?  யாரைக் கேட்பது?   விண்மீன்களைக்  கேட்போமா ?  === என்று கவி கேட்கின்றான்.






O World Invisible We view thee!  Poem by Francis Thomson,  (1859 - 1907)    first two stanzas translated       The poet's  tomb bears the last line from a poem he wrote for his godson - Look for me in the nurseries of Heaven[.

ref dbv415  

Steady Malaysian Economy & Growth.


ஏற்ற இனிய 
மலேசியப் பொன்னாட்டில்
ஆற்றொழுக்குப் போலும் பொருளியலே‍‍!
நேற்றேபோல்
கூற்றம் எதிர்படாக்
 கூன்படாக் கொள்நிலையில்
ஆற்றலோ  டார்க்கும்
நெறி.

Economy will remain on steady growth path.
Consumer price index will tend to about 3%.
There may not be any fundamental shifts in liquidity.

Tan Sri  Dr Zeti.  Bank Negara Governor (Malaysian Reserve Bank)


https://www.google.com.my/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0CC4QFjAC&url=http%3A%2F%2Fwww.nst.com.my%2Fnode%2F23421&ei=rNf-U8HsN5ahugT52IDwDQ&usg=AFQjCNG7MjPUE5RgNbXU1uqExQQfnlMW9g&sig2=C2hwZIEhv_bs0QAgt59Qvg&bvm=bv.74035653,d.c2E



Malaysia posts stronger 6.4pc growth in Q2

BY RUPA DAMODARAN - 15 AUGUST 2014 @ 12:09 PM
KUALA LUMPUR: The Malaysian economy chalked a remarkable 6.4 per cent growth in the second quarter.
Bank Negara Malaysia Governor Tan Sri Dr Zeti Akhtar Aziz said the growth forecast of 4.5-5.5 per cent will be revised upwards in the upcoming Budget.
For the first half of the year, the economy grew by 6.3 per cent.
The first quarter surged by 6.2 per cent.
Inflation stabilised at 3.3 per cent during the period.
Zeti said private investment remained strong, with capital spending in the services and manufacturing sectors.
For the second quarter, all the sectors enjoyed strong growth except services and agriculture.

புதன், 27 ஆகஸ்ட், 2014

புதிய மொழிபெயர்ப்புகள்



தியரி (theory) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு தெரிவியல் என்பது. இதை அமைத்தவர் தேவ நேயப் பாவாணர்.  பிராக்டீஸ்  (practice )  என்பதற்கு புரிவியல் என்பார் அவர். இவை நன்கமைந்த மொழிபெயர்ப்புகள்.

மற்ற முனைவர்கள் / அறிஞர்கள் இதைத் தெரியம் என்று சுருக்கியுள்ளார். இது "தெரியும்" என்பது போல் கேட்கும் எனினும் வேறு சொல் என்று அறிக‌ 

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

"இல்கொள்கை" நாத்திகம்

இலவசம் ‍  காசு இல்லாமலே கை வசம் வரும் நிலை அல்லது பொருள். இதன் அடிச்   சொற்கள் இல் என்பதும் வசம் என்பதும் ஆகும். வசம் ‍ :  வை> வய் > வயம் > வசம். இதை சில தடவை எழுதியுள்ளேன்.

இலாவணியம்  :  இலா = இல்லாத; அணி = அழகு;  அம் = விகுதி. என்ன பொருள்?  ஊரில் இல்லாத அழகு;  உலகில் இல்லாத அழகு; பேரழகு என்று பொருள்படும்.

இவை எல்லாம் பிற்காலப் புனைவுகள். எடுத்துச் சொன்னாலே புலப்படும்.

 இவற்றைப் பின்பற்றி, அறிஞர் அப்பாத்துரையார் ஒரு சொல் புனைந்தார்.
அது நாத்திகம் என்பதற்கு ஒரு தமிழ்ச்சொல்.  அது: "இல்கொள்கை" என்பது.
இன்னுமது பெரிதும் வழக்கிற்கு வந்துவிட்டதாகத் தெரியவில்லை.

லாவண்ய என்ற சொல், எப்படி அமைந்தது என்பதில் சமஸ்கிருத பண்டிதர்கள்  தங்களுக்கு ஐயப்பாடு உண்டென்கிறார்கள். சமஸ்கிருதமென்று உறுதிப்படுத்திவிடவில்லை,

இல்லை என்ற தமிழ்ச்சொல்லை எடுத்து இத்துணை புனைவுகள் புரிந்ததும் ஒரு  பெருந்திறனேயாகும்,

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

கோடிகளாய்க் குவிந்தி டாதோ?


அரசினரின் வருமானம் உயர வேண்டின்
ஆங்காங்கு சாலைகளில் கடப்பு வாசல்,
வருவாசல் செல்வாசல் இரண்டு பக்கம்,
வண்டிகளைத் தடுத்திடவே குறுக்குச் சட்டம்!
ஒருவழிக்குத் தொகையொன்று  நிறுவி அட்டை
ஒத்திஎடுத் திடும்போது கழிக்கும் காசை!
இருவழியும் போம்வண்டி இடும்ப ணத்தை.
எடுத்தெண்ணக் கோடிகளாய்க் குவிந்தி டாதோ? 



Meanings:
கடப்பு வாசல் =  a toll gate or some pass akin to that.
வருவாசல்  செல்வாசல் =  gates for incoming / outgoing vehicles.
குறுக்குச் சட்டம் -   a barrier known as drop arm barrier   ("வீழ்கைத்   தடை ")
ஒரு வழிக்குத் தொகை - a toll charge for a passing vehicle on trip basis
 ஒத்திஎடுத் திடும்போது கழிக்கும் காசை! -  when a card is tapped on a machine, it  makes a deduction. In other types you have to insert the card for a deduction to be made.
 நிறுவி determine(d)


அரசியல் மறுவரவு

வேண்டாப் பொருளே அரசியல் என்றுமுன் 
விட்டு விலகிடினும்
தீண்டாப் பொருளோ உலக நடப்புகள்
தீரா மனக்கயிற்றில்
ஆண்டாங் கிருந்த தொடர்புகள் உண்டே
அவையே கனம்பெறுமே!
பூண்டார் துறவே அரசியற் கென்றொரு 
போதும்  புகலொணாதே!



பொருள் 
ஆண்டாங் கிருந்த -  ஆண்ட ஆங்கு  இருந்த :   ஆட்சியில் இருந்தபோது அங்கே  இருந்த .
தீரா மனக்கயிற்றில்  தொடர்புகள் =  இதை மனக்கயிற்றில் (ஆண்டாங்கு இருந்த) தீராத் தொடர்புகள்.என்று மாற்றிப் போடவும்.   மனம்  கயிறுபோல் பிணிக்கப் பட்டுள்ளது என்பது பொருள். உரை நடைக்குச்  சொற்றொடர்களை மாற்றிப் போடுதல் வேண்டும். 








Dr Mahatir's criticism

Muhyiddin breaks silence on Dr M’s criticism of Najib


வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பசியார்தல்

ப்ரெக்ஃபஸ்ட்  (breakfast)  என்பதற்குப்  பேச்சுத் தமிழில் ஒரு சொல் உள்ளது. இலக்கியத் தமிழில் என்றால் தேடிப்பார்க்கவேண்டும்.  வகுப்பறை வாத்தியார் "காலையுணவு" என்று மொழிபெயர்க்க அவாவுறுகிறார். அது மன நிறைவு அளிக்குமானால், நண்பகல் உணவு (மதிய உணவு), இரவுணவு என்றெல்லாம் தேவைக்கேற்ப விரிக்கலாம்.
ஸெலாமத் பாகி (சலாம், சலாமத்) என்ற மலாய்க்கு காலை வணக்கம் என்று சொல்வது சரி.  அது  போலவா?
ஆனால், "பசியார" என்ற தொடர் , இலக்கிய வழக்குப் பெறாவிட்டாலும் .............. நாம் தேடிப்பார்க்கவேண்டும்,

குறளில், "ஏதிலார்  ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை" என  பசியார்தல் வந்துள்ளது. ( ?) ஆர்தல்- ‍ உண்ணுதல். 
பசி ஆர்தல்  -  பசிக்கு  ‍ உண்ணல். கு  என்னும் வேற்றுமை  உருபு  தொக்கு  நின்ற   வேற்றுமைத்  தொகை.

பசி என்பதும் ஆர்தல் என்பதும் தமிழில் உள்ளவையே.  சேர்த்துப் பசியார்தல் என்று    சொல்வதில் தவறில்லை 

தமிழ் அகர வரிசைக்காரர்கள் " நாட்சோறு" என்கிறார்கள். ஆனால் இது மணமக்களுக்கு மணவினைக்குமுன் ஊட்ட்டும் உணவையும் குறிக்குமாம். பொதுப்பொருளில் "பசியார்வது" என்றும் பொருள்படுமாம்.

பசியாறுவது என்பது சரியில்லை. பசி(யை) ஆற்றிக்கொள்வது எனல் அமையும்.
எனினும் இது ஒரு சொன்னீர்மையை இழந்துவிடுகிறது.  மேலும்  ஆறுவது எனின்  தானே ஆறுவது.  ஆறுவதைப் பிறவினையாக்கி  ஆற்றுவது என்றாலே  அமைந்திடும்

பசியார்கிறேன் என்பதை இறந்த காலத்தில் சொல்வதானால், பசியார்ந்தேன் என்று சொல்லவேண்டும்.   ஆனால் இவ்வடிவம் வழக்கில் இல்லை.  சேர் > சேர்ந்தேன், ஊர் > ஊர்ந்தேன், தேர்> தேர்ந்தேன், கூர் > கூர்ந்தேன், நேர் > நேர்ந்தேன் ( நேர்ந்துகொண்டேன்) என்று வருதலால், ஆர் > ஆர்ந்தேன் என்றுதான் வரவேண்டும்.  பசி ஆரினேன் என்பது பேச்சுவழக்கு விதிவிலக்கு போலும்..

வைடும் (wide) வீதியும்

இந்த இரு சொற்களுக்கும் உள்ள ஒலி அணுக்கத்தை நீ ங்கள் கூர்ந்து உணர்ந்திருக்கலாம்.  Wide எனற்பாலதை வீ  டி (தி)  என்று சொல்லிப் பார்த்தால், வீதி என்ற சொல்லுடன் உள்ள நெருக்கம் நன்கு புலப்படும். 

வீதி என்ற சொல் சங்கதத்தில் இருந்தாலும், விரிவு என்ற பொருளில் உளதா என்பதைக்  கவனிக்கவேண்டும்.  தமிழில் விரிவுப் பொருளில் வருகிறது. ஏனைத் திராவிடமொழிகளிலும் இவ் வுண்மை ஆராயத் தக்கது.

விரி > விரிவு.
விரி > விரிதருதல்.
விரி> விரி + தரு + அம் > விரிதாரம் > விஸ்தாரம்
ரி என்பதை எடுத்துவிட்டு, ஸ்  / ஷ்  இட்டு அமைக்கப்பட்டது. 

கௌளி

இனிக் கௌளி என்ற சொல்லைப் பார்ப்போம்.

இதனை நீங்கள் இந்தோ‍ஐரோப்பிய மூலச் சொற்களின் அகரவரிசையில் தேடிப்பாருங்கள். சங்கதத்தில் kIlAlin   என்றொரு சொல்லும் உளது. இது கௌளியுடன் தொடர்பு பட்டதாகத் தெரியவில்லை.  கீலா தமிழில் கௌளி ஆயிற்று என்று வாதிக்கலாம்.

கௌளி பூச்சி புழுக்களைக் கௌவித் தின்கிறது. அதற்குப் பல் இல்லை. கவ்வி உள் இழுத்துக்கொள்கிறது. கவ்வு முன், நாக்கை நீட்டுகிறது என்றாலும், ஒரு சொல்லுக்குள் எல்லாச் செயல்களையும் படம்பிடித்தமாதிரி வரணிக்கத் தேவையில்லை, சொற்கள் அங்ஙனம் அமைவது அரிதாகும்.

கவ்வு + உள் + இ > கவ்வுளி > கவுளி. வகர ஒற்று இடைக்குறைந்துள்ளது, 

இது கவ்வி விழுங்குகிறது என்பதே பெயர்க்காரணம். அதாவது மெல்லப் பல் இல்லை.  ஆகவே கவ்வு+ உள்+ இ.  உள் என்பது உண் என்பதனோடு தொடர்பு உடையது.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

vIthi வீதி


வீதி என்ற தமிழ்ச்சொல்லை இங்கு ஆய்வோம். வீதி என்பது விரிவு என்ற அமைப்புப் பொருளை உடையது.  இப்போது  ஸ்தீரீட்  street   என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருள்கொண்டு வழங்குவதாகும்.

விர் > விய்  (வியல், வியன், வியப்பு)'  விய் > வியா > வியாபாரம்;)
விர் > வில் > விலை. (ரகர லகர திரிபு);  வில்+தல் = விற்றல்.

விர் > விரி என்பது முன் இடுகைகளில் கூறப்பட்டது.

இவற்றை மறந்துவிடலாகாது.

விர்> விய்  > விய்தி  > வீதி.

ஒப்பு நோக்குக: செய்தி >  சேதி.