வியாழன், 28 ஆகஸ்ட், 2014

காணாத ஞாலமே Poet F Thompson

காணவும் இயலாத ஞாலமே ‍‍‍‍--- நீ எம்
கண்களில் படுகின்றாய்;
தொடவும் அமையாவிப் பாரிடமே ---அண்டித்
தொடுதலும் அடைகின்றோம்!

அறியவும் இயலா உலகுனையே ---- யாம்
அறிந்தே நடக்கின்றோம்;  ‍‍
அறியா நிலையில் யாமுனையே ‍---- இறுக‌
அணைத்துக் கிடக்கின்றோம்,

******

மாகடல் மாந்திட மீனெழுமோ‍‍----காற்று
மாறறி கருடன் தாழுறுமோ?
மேகத்து மிசைமினும் மீன்களையே‍---கேட்போம்
மேலிருப்பானோ  நீலவானில்?
ணா 



குறிப்புகள்:

ஞாலம் -பூமி       அமையாவிப் பாரிடம் --  இயலாத இந்தப் பூமி,
அண்டி - (உன்னை) அணுகி .
மாந்திட  - to experience; to enjoy or indulge.  
எழுமோ -  to soar  above,  பறத்தல் போல் மேலே உயர்தல்.
காற்று  மாறு  அறி கருடன் -  காற்றின் வீசும் திசை அறியும்  கருடன்.
கீழுறுமோ -  கீழே இறங்கி  அதை அறியுமோ?  (எ-று ). 
மிசை  -  மேலே .  மினும் =  மின்னும்   மீன்களையே -  நடசத்திரங்க்களையே.
மேலிருப்பானோ  நீலவானில்?   -  இந்த நிகழ்வுகளுக்கெல்லாம்  மேலே  நீல வானுக்குள்  அவன் (கடவுள்)  இருக்கின்றானோ?

பூமியில்  நமக்குப் புரியாத பல நடக்கின்றன.  அதில் நாமும்  அறிந்தோ அறியாமலோ  இணைந்து கிடக்கின்றோமே! இவையெல்லாம்  நடத்திக்கொண்டு  இறைவன் மேலிருக்கின்றனோ?  யாரைக் கேட்பது?   விண்மீன்களைக்  கேட்போமா ?  === என்று கவி கேட்கின்றான்.






O World Invisible We view thee!  Poem by Francis Thomson,  (1859 - 1907)    first two stanzas translated       The poet's  tomb bears the last line from a poem he wrote for his godson - Look for me in the nurseries of Heaven[.

ref dbv415  

கருத்துகள் இல்லை: