செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

"இல்கொள்கை" நாத்திகம்

இலவசம் ‍  காசு இல்லாமலே கை வசம் வரும் நிலை அல்லது பொருள். இதன் அடிச்   சொற்கள் இல் என்பதும் வசம் என்பதும் ஆகும். வசம் ‍ :  வை> வய் > வயம் > வசம். இதை சில தடவை எழுதியுள்ளேன்.

இலாவணியம்  :  இலா = இல்லாத; அணி = அழகு;  அம் = விகுதி. என்ன பொருள்?  ஊரில் இல்லாத அழகு;  உலகில் இல்லாத அழகு; பேரழகு என்று பொருள்படும்.

இவை எல்லாம் பிற்காலப் புனைவுகள். எடுத்துச் சொன்னாலே புலப்படும்.

 இவற்றைப் பின்பற்றி, அறிஞர் அப்பாத்துரையார் ஒரு சொல் புனைந்தார்.
அது நாத்திகம் என்பதற்கு ஒரு தமிழ்ச்சொல்.  அது: "இல்கொள்கை" என்பது.
இன்னுமது பெரிதும் வழக்கிற்கு வந்துவிட்டதாகத் தெரியவில்லை.

லாவண்ய என்ற சொல், எப்படி அமைந்தது என்பதில் சமஸ்கிருத பண்டிதர்கள்  தங்களுக்கு ஐயப்பாடு உண்டென்கிறார்கள். சமஸ்கிருதமென்று உறுதிப்படுத்திவிடவில்லை,

இல்லை என்ற தமிழ்ச்சொல்லை எடுத்து இத்துணை புனைவுகள் புரிந்ததும் ஒரு  பெருந்திறனேயாகும்,

கருத்துகள் இல்லை: