திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ஆஞ்ச நேயர்க்கு வடைமாலை.

எத்தனித்த எல்லாம்  இயற்றிமுற்றுப் பெற்றடைய‌
வைத்த ஆஞ்ச நேயருக்கு வடைமாலை!
பித்தனைய பெற்றியிலே நின்றவர்க்கு முத்தனைய‌
வெற்றியினைத் தந்தவற்கு வடைமாலை!
குத்தனைய துன்பமதை நித்தலும்வி லக்கிவைத்துக்
குதூகலம்வி ளைத்தவற்கு வடைமாலை!
மெத்தவுமிவ் வாழ்வினிக்க மேதினியில் பற்றுமொரு
மித்துவர வித்தகற்கு வடைமாலை. .

கருத்துகள் இல்லை: