ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஆதாயம்


ஆதாயம் என்ற சொல்லை முன் ஒன்றிரண்டு இடுகைகளில் விளக்கியதுண்டு.
இப்போது இதை மேலும் தெளிவாக்குவோம்.  இப்போது வணிகம் தொடர்பாக மட்டுமின்றி அரசியல் தொடர்பாகவும் பயன்பெறுவதால் இதை அறிந்து இன்புறுதற்கு இது நல்ல நேரமே.

"அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் "  என்பது தொலைக்காட்சியில் பேசப்பட்டு அடிக்கடி செவிசேரும் வாக்கியம்.

"முதல்" என்னும் முதலீட்டிலிருந்து செலவு செய்தல் கூடாது. இதை தமிழ் நூல்கள் அறிவுறுத்துகின்றன.  "ஆன முதலில் அதிகம் செலவானால்"  என்ற‌
வெண்பாவை நோக்குங்க்ள்.  இங்ஙனம் "ஆன முதல்" என்பதைக் குறிப்பதே  ஆதாயம் என்பதில் வரும் "ஆ"  ஆகும், முதல் உழைத்தால்தான், அது வருமானத்தைத் தருகிறது. ஆகவே. தருவது என்பது குறிக்க, 

 "தா" என்ற வினைச்சொல் பகுதியை அடுத்துப் போட்டுக்கொள்ளுங்கள். இப்போது  ஆதா  எனபது தோன்றியுள்ளது.

சொல்லாக வரின் "அழகு" என்றும் மற்றும் பெயராக்க விகுதியாகவும் பயன்படும் அம் விகுதியை இப்போது இடுங்கள்.

ஆ+தா+ அம் = ஆதாயம் ஆகிறது. ய என்பது உடம்படு மெய்.

ஆகூழ், என்ற சொல்லிலும் ஆ என்பதிருத்தலைக் காணலாம்.  ஒரு காலத்தில் ஆகாரத்தில் தொடங்குதலே சிறப்பு  fashionable  என்று கருதினர். ஆகாரம், ஆகாயம் என்பன முன்பு விளக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: