செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

இராமேஸ்வரம்

ஈஸ்வரன்  என்ற சொல் அமைந்த விதம் எளிமையானதே.

இறைவர் என்ற தமிழ்ச்சொல்லை எடுத்து, "றை"க்குப் பதில் ஷ்  அல்லது  ஸ் போடுங்கள்.  இகரத்தை ஈகாரம் ஆக்குங்கள்.

இறைவர் >  ஈஷ்வர் அல்லது ஈஸ்வர்.

இங்கு பலர்பால் அர் விகுதி  இருப்பது காணலாம்.

ஒருமை அன் விகுதியின் மேல் பணிவுப் பன்மையாகிய பலர்பால் அர் சேர்வது
பரவலாகக் காணப்படுவதொன்று. எ‍ டு:

இறையன் > இறையனார்.

இங்கே மாற்றமாக, அர் மேல் அன் சேர்ந்து ஈஸ்வரன் என்ற சொல் அமைகிறது.

இங்ஙனம்  "ஈஸ்வரன்" என்பதமைந்தது.1

அர் விகுதியின்மேல் அம் விகுதியும் சேரும்.

இராமேஸ்வர் > இராமேஸ்வரம்.

கருத்துகள் இல்லை: