வியாழன், 14 ஆகஸ்ட், 2014

Belief in God and astrology கடவுளை..........

(These are  in different meters )

கடவுளை நம்பவில்லை ‍‍‍--- சிலர்
கணித்தறி சோதிடம் நம்புவ தில்லை.
இடர்வரும் வந்தபோதும் ‍‍--- விழுந்
திறைவனின் ஆசிகள் வேண்டுவ தில்லை!

பற்ற‌னும் துன்புற நேரின் --- அவன்
பளுவினை ஏற்றிடப் பக்கலில் தெய்வம்!
உற்றதை ஒற்றையாய் நின்று ‍‍‍--- துன்பம்
உழந்திடும் ஓர்சுமை அன்னவற் கில்லை.

இல்லெனில் ஏதுதுணை‍‍‍---அவன்
இதயமும் வீழ்ந்திடும்; எழும்புவ தெப்படி?
கல்வரு  நீரினில்போல் ---- விழும்
காணவும் கிட்டாது மீளவும் ஒட்டாது.


சோதிடம் பொய்யெனிலோ  ‍‍‍--- இனித்
தோன்றுவ‌ தெங்ஙனம்  கூறுதல் கூடும்?
வாதிடு வாய்க்கிடமோ ‍--- இன்றி
வருவது சரிபட வரைவது மெப்படி?

தெய்வமும் இல்லையென்றால் --- மனிதன்
செய்வதிற் கேள்விகள் கேட்பாடும்  ஒன்றில்லை;
வைவதும் வதைகொலையும் --- ஆனவை
செய்பவர்க் கோர்தடை இவவுல கத்திலை

இன்மையும் உண்மையெனில் --- நீவிரும்
ஈண்டு  தொழுவதில் மூண்ட செலவுள ;
உண்மையில் உண்டெ னிலோ --- தெய்வம்
உமக்கொரு தண்டனை தரக்கெடும் யாவுமே!


குறிப்பு:  இங்கு வெண்டளை பின்பற்றவில்லை; மேலும்  மனத்துள் தோன்றிவந்த சந்தங்களையும் மாற்றி அமைக்காமல் எழுதப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: