சனி, 24 பிப்ரவரி, 2018

பரிசுகள் பெறுவதில் ஆபத்து....



போர்களிலே தாம்குண்டு போடுவார்கள் இங்கென்ன
புதுமணத் தம்பதிகள் நாமே! - இந்தப்
பூதலத்தில் நாமிணைந்தோம் காதலினால் கட்டுண்டோம்
ஏதினியே  வாழ்வில்  இன்னல்?  

என்றபடி போகமிழை புத்தம்புது  இல்லமதில்
இருந்தபடி எக்காளம் இட்டு -- அங்கு
வந்தபரி சுப்பொருள்கள் வாரியிட் டுப்பிரித்தார்
வன்`குண்டே வெடித்த தங்கே

மணமகற்கு வந்துற்ற மாதுயரை என்சொல்வோம்
மரித்துவிடப் பெண்ணும் ஆங்கு --- உயிர்
பிணத்திற்குப் பக்கலிலே காயம்பெரி தாய்ப்பட்டு
பிழைப்பாளோ என்ன   வீழ்ந்தாள்

மணத்திற்கு  வாங்காதீர்  மகிழ்ச்சியால் எப்பரிசும்
மாநிலமே வீணர் வாழும்---- ஒரு
குணத்திற்கு வாழாத  கூழ்க்கலமே ஆயிற்றே
குற்றநெறி உற்றழிந்     ததே.. 
 



கருத்துகள் இல்லை: