செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சிவராத்திரி.



சிவனுக் கமைந்ததிந் நல்லிரவே
செவ்விய வாழ்வினி வெல்வரவே
எவரும் வணங்கி அருள்பெறவே
இவ்வுல கம்ஓர் தெருள்பெறவே .

செவ்வொளி என்பது நம்சிவமே
சீர்பெறச் செய்குவம்  இன் தவமே;
ஒளவியம் பேதம் இவையிலவே;
ஆர்க்கும் உணவே இவணுளதே

கண்விழித் திங்குக் கடனியற்றி
கனிவுடன் பூசை உடனியற்றி
விண்ணாய்  விரிந்த ஒளிவிரவும்
வினைநலம் எய்தும் களிப்புறுவோம்.


கருத்துகள் இல்லை: