சனி, 17 பிப்ரவரி, 2018

சமஸ்கிருதப் பாடல்கள் மறைந்தன பல

சென்ற இடுகையிலிருந்து தொடர்வோம்.



அழிந்துபோன நூல்களும் பாடல்களும்

தமிழில் பல நூல்களும் பாடல்களும் அழிந்தன.  இங்கனமே சமஸ்கிருதத்துக்கும்  பல பாடல்கள் எட்டாதொழிந்தன. இதற்குக் காரணம் இறைவனைப் பாடித் துதித்தவர்கள் தம் பாடல்களை எழுதவில்லை.  அவற்றை வாய்மொழியாகவே பாடினர்.  அத்தகைய பாட்டுகள் ஏராளமிருந்தன. வேதவியாசன் உருக்கு வேதமென்ற பெயரில் இவற்றைத் தொகுத்தபோது  அத்தொகுப்பில் அகப்பட்டவை போக மற்றவை அழிந்துபோயின.  இவை எத்துணை இருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.  இவற்றை மீட்க எவ்வழியும் இல்லை.

திருவள்ளுவர் திருக்குறள் இயற்றிய காலத்தின் பின்னரே உருக்குவேதம் தொகுக்கப்பட்டது. பாடல்கள் தோன்றி வழங்கிவந்த காலம் வேறு; அவை தொகுக்கப்பட்ட காலம் வேறு. 

இதற்குச் சான்று.  திருவள்ளுவமாலை 23வது பாடலில் வேதத்தைச் செய்யாமொழி என்று வெள்ளிவீதியார் என்ற புலவர் குறிப்பிடுவது ஒன்றாகும்.  செய்யா என்பதற்கு தொகுப்பாகக் கோவை செய்யாத என்று பொருள். மனிதன் செய்யாத அல்லது கடவுள் செய்த என்று பொருள்கூறுவோருமுண்டு.  பின்னர் அவை கோவை செய்யப்பட்டன. இக்காலத்துக்கு முன்னும் சமஸ்கிருதம் என்ற சொல்லால் குறிக்கப்பெறும் மொழி இருந்தது ஆனால் எழுத்தில் இல்லை.

இதனால் பாணினியின் இலக்கணமும் வாய்மொழியாகவே இலங்கிற்று.

குறுந்தொகையிலும் எழுதாக் கிளவி எனற தொடர் உள்ளது.  இப்பாடல்கள் (குறுந்தொகை )  எழுந்தபோதும் அது  (சங்கதம் )  எழுத்தில்லாத மொழியாகவே இருந்தது.

திருவள்ளுவமாலையில் இன்னொரு பாடலும் இதையே தெரிவிக்கிறது:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்தேட்டின் புறத்தெழுதார் --- ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர்  வின்று
(தி-மாலை, . 15)

மந்திரங்களுக்கு பலுக்குமுறை முன்மையானதாகும்.  
 பிழைபடப் பலுக்குதலால் மந்திரம் பலனின்றி முடியும்.  
 ஆதாலால் எழுத்தில் எழுதி அவற்றைக் 
கெடுக்கலாகாது என்பதே எழுதிவைக்காமைக்குக் 
காரணம்.  ஆனால் பல மறக்கப்பட்டு 
மீட்சியின்றி மறைந்தபின் இக்கொள்கையை
 மாற்றிக்கொண்டு எழுத்துக்களால் எழுதிவைத்தனர்.


  



:


கருத்துகள் இல்லை: