வியாழன், 5 அக்டோபர், 2017

தீபாவளிச் சேலை



தீபாவளி வருமுன்பே தீபஒளி  காண
சேலைக்கடை ஒன்றினுகுச் சென்றிடுக,  பேணும்
ஆபவனி கண்டுமகிழ்ந் தணியழகு கூர்ந்தே
அயர்வென்ப  தடையாமல் அகமகிழ்வீர் ஆர்ந்தே.
கணவர்குறை காசெனவே கசடு பறைந்  தாலும்
கசக்கியெடு கரந்துளதைக் கறந்திடுஇந்  நாளில்
மணவினையும் அணிவிழவும் பிற நாளும் தேடும்
மதிப்புளதோ புடவையலால் தீபஒளி கூடும்.  


கருத்துகள் இல்லை: