ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தீப ஒளித் திருநாள் ( தீபாவளி).

தீப  ஒளித்  திருநாள் ( தீபாவளி).



காட்டினில் கற்கள் உரசி ---- அது
கனலோ டெரிந்தது கண்டாளோர் அரசி;
வீட்டினில் தீயதைக் கொணர்ந்தே ---- ஒரு
தீபமாய் ஏற்றினள்  அன்பனும் இணைந்தே,.

இருட்டினில் வாழ்ந்தவன் மாந்தன் ---- சூழ்
கருப்பினைக் கண்டு வெறுபினில் ஆழ்ந்து;
விரட்டினன் தீபத்தின் அளியால்---- விழுமிய
வேகத்தை ஆக்கினன் போகமாம்  ஒளியால்

தீப  ஒளித்திரு வினையே  ---- கண்டு
தினங்கூத் தாடினும் தேவுறு  ஓர்நாள்;
ஈவ துடன்மனத் தன்பில்  ----  இல்லத்
திருக்கும் உணவனைத் தும்கலந்துண்போம்.

தீப ஒளித்திரு  நாளின் ---- மேன்மை
தேர்ந்து தெளிந்திட்ட முன்னவர் எல்லாம்
ஆவ தனைத்துமிந் நாளில் ---- என்று
அமைத்துச் சிறப்பை இணைத்திணைத் துள்ளார்.

பழையதில் புத்தாக்கம் செய்தார் ---- நாம்
பயனுடைத் தீபத்தின் மேன்மையை எய்த
விழைவதை எந்நோக்கம் என்று ---- எண்ணி
விரிக்காது தீபத்தின் ஒளிகாண்க வென்று,

கருத்துகள் இல்லை: