செவ்வாய், 24 அக்டோபர், 2017

தின்ன அஞ்சும் தீபாவளி......



எண்ணெய்ப்பல   காரமென்றால் கொழுப்பே கூடும்;
இனிப்புப்பல  காரமென்றால் சருக்கரை நோய்.
என்னபல காரமினி எடுத்துத் தின்ன?
என்றுகவல் கின்றமனம் மன்றில் யார்க்கும்;
மின்னுமெழில் தீபஒளித் திருநாள் தன்னில்,
மிசைந்திடவே மிரள்கின்ற காலம் ஆச்சே!
முன்னிருந்த மாந்தருக்குள் இல்லா நோய்கள்
இன்றுமிக்கு வந்தமையால் உண்டா யிற்றோ? 

கவல்கின்ற -  கவலை கொள்கின்ற;
மிசைந்திட -  உண்ண

கருத்துகள் இல்லை: