திங்கள், 16 அக்டோபர், 2017

STAGNANT DIRTY WATER IN TN PUBLIC HELP REQD




அழுக்கிருந்த இடத்திலெல்லாம் தேங்கி நின்ற
அதில்கொசுவை வளர்த்துவந்த டெங்கிக் காய்ச்சல்!
கிழக்கினிலிந்  தியக்குழும்பின் காலம் தொட்டுக்
கெடுவின்றி இருந்தநீரிற் பிறந்த தாமோ?.....
வழக்கமுற  வந்துவிட்ட கொசுவின் நீரை
வாரி இறைத் தால் நாற்றம் என்ப தாலே
தொழிற்கென்று தோன்றிவிட்ட தோழன் கூட
தோண்டிவீசி  னால்மயங்கித் துவண்டு வீழ்வான்.

செய்தி விளக்கம்:

தமிழ் நாட்டுப் பள்ளம் படுகுழிகளில் தேங்கிக் 
கிடக்கும் நீரையெல்லாம் வெளியேற்றினாலே 
டெங்கியை ஒழிக்கமுடியும் என்ற முடிவிற்குத்
தமிழ் நாடு அரசு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
அதற்கு மக்களின் ஒத்துழைப்புத்
 தேவையாகிவிட்டது என்^கிறது.......
முதல்வர் கூறியதாக வந்த தாளிகைச் செய்தி.

இதிலிருந்து பிறந்த கவி இது.

இப்படிப் பல கவிகள் எழுதினாலும் 
ஒன்றிரண்டையே வெளியிட்டுள்ளோம்.  
இது வேறு நாட்டில் நடப்பது.
நமக்குள்ளது "கலாசாரத் " தொடர்பே.  
இவற்றைத் திறந்த உள்ளத்துடன் படித்து
 இன்புறவும். ஏற்கவியலாப் போது
எடுத்துவிடுகிறோம் -  தெரிவித்தால்.

அல்லது வெறும் செய்தியாகப் பார்க்கவும்.....

"உலகெங்கும்" என்று வரும்போது,  பல 
நாடுகளிலும் சிற்சில இடங்களில் இப்படி 
இருக்கலாம்.  சில நாடுகளில் இவைபோல்வன 
குறைவு. தமிழ் நாட்டில் கொஞ்சம் அதிகமாக
இருக்கலாம்.  அல்லது பிற நாடுகளிலுள்ளவை 
நமக்கு எட்டாமலும் இருக்கலாம். மக்கள் குப்பை 
போடாமலும்  அழுக்கைப் பொது இடங்களில் 
வீசாமலும்  இருக்கவேண்டும்.  பள்ளம் 
படுகுழிகளை மூடிவிட, 
மக்கள் அரசுக்கு உதவவேண்டும்.

எல்லோரும் நோயின்றி வாழவேண்டும்.

 





கருத்துகள் இல்லை: