ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஏமாற்றும் மழை



வலியதோர் இடி முழக்கம்
வருமழை நெடிதென் றேனா
தொலியிலே குளிரு ணர்ந்தேன்!
துவண்டுபோய்ச் சாயந்து கொண்டேன்

சடசட கொஞ்ச நேரம்,
சலிப்பில்லை இன்னும் வேண்டும்.
கொடகொட என்றே ஊற்றி
குளிர்விக்க நிலத்தை என்ன,

கடுமழை கனவாய் ஆகி
கண்மூடு முன்னே ஓய
விடுவிடு எனைஏ மாற்றும்
வீண்படை  எனவெ ழுந்தேன்!

கருத்துகள் இல்லை: