ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

தேவருலக மாதர் பெயர்கள்.



தேவருலகில் இருப்போர் மனித உருவில் இருக்கிறார்களா என்று யாரும் அறிந்ததில்லை. மேலுலகோர் அனைவரும் உருவற்றவர்கள்  (அரு) என்றே எண்ணத்தோன்றுகிறது.  அப்படி ஓருலகு இல்லை என்போரும் உளர்.

எனினும் புராணங்களில் ( தொன்மங்களில்) கூறப்படும் தேவருலக மாதர்கள் அழகியர் என்று வரணிக்கப்படுவதுண்டு.

அரம்பை என்பவள் அரியவள்.
அர் = அரிதானது..   அரு < அர்.
அம் = அழகு
பா = இது பைம்மை ( இளமை) என்னும் பொருளது. பசுமை என்று பொருள்படும்.
பா என்பது பை என்பதன் திரிபு அல்லது விளிவடிவம்.
எனவே   அரம்பை அரிய அழகினள்.

எ-டு:

பை -  பையன். பையல்.   (அகவை குறைந்தவன்).
பை - பைந்தமிழ்.  ( என்றும் மூவாத தமிழ்).

பை - பைத்தியம் (பைத்து+இயம் ).  அறிவுத்திறன் முதிர்ச்சி அல்லது வளர்ச்சி பெறா நிலை.    பைத்து: பைம்மை உடையது.  இயம் - விகுதி. இதுவே இச்சொல்லின் அமைப்புப்பொருள். வழக்கில் பொருண்மை வேறுபடலாம்.

ஊர்களில் காணப்படும் அழகிகளே “ஊர்வசி”.  சொல் ஊரில் வசிப்பவள் என்றே பொருள்கொள்ள இடந்தருவது ஆகும்.

துலங்கும் உத்தமம் உடையாள் : துலோத்தமை.
துல = துலங்கு.
உத்தமம் : உத்தமை.
இது திலோத்தமை என்று மாறியமைந்தது.
துல > தில. 
இங்ஙனம் மனிதமாதர்களைக் கண்டே  தேவமாதர்கள்
_”உருவாக்கப்பட்டனர்”

கருத்துகள் இல்லை: