வெள்ளி, 29 செப்டம்பர், 2017

காக்கையைத் தேடி



காக்கையைத் தேடி…….
(புதுக்கவிதை)

காக்கையே காக்கையே
காலை மணி ஐந்தேதான்;
காலையிலே என்ன இரைச்சல்
உனக்கே உற்றதென்ன கரைச்சல்?

பார்க்கிறேன் எங்குள்ளாயோ
படு இருட்டில் தெரியவில்லை!
சேர்க்கலாம் உன்வசமாய்
சீராக உண்ணக் கொஞ்சம்
ஏக்கமின்றி உண்கவென்றால்
இருக்குமிடம் மறைவிடமோ!
ஆக்கமின்றிக் கரைந்திடாமல்
அருகினில்வா இதையுண்பாய்……..

கருத்துகள் இல்லை: