வியாழன், 14 செப்டம்பர், 2017

மீனவ நண்பர்கள்.

நாம் மீன் உண்ணாதவர்களாக இருக்கலாம். சைவ உணவினிகள் உண்ணார். என்றாலும் மீனவ   நண்பர்கள்  ஆபத்தில் உதவக்கூடியவர்கள்..  மனத்தில் ஏது நினைத்தாளோ ஒரு சீன நங்கை பினாங்குப் பாலத்துலிருந்து கடலில் குதித்துவிட்டாள். அருகில் யாருமில்லை. யாரும் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டுதான் குதித்தாள்.

ஆனால் அவளும் அறியாமல் நம் மீனவ நண்பர்கள் இதைப் பார்த்துவிட்டனர்.
அவர்கள் இருந்த படகில் அங்கு விரைந்து வந்து அவளைக் காப்பாற்றிவிட்டனர். இப்படிக் காப்பாற்ற அவர்களால்தான் முடியும்.

அன்புடன் பேசித் தற்கொலை  வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் என்று போதித்தனர்.

அவர்களை மீனவ நண்பர்கள் என்பது வெகு பொருத்தமே.

இந் நிகழ்வு பற்றி 2016ல் எழுதிய கவிதை இதோ.



பினாங்குப் பாலமே ஆனால் என்ன?
பிறரருகில் இல்லாமல் போனால் என்ன?
 

விலாங்குப் பாணியிலே  நீருக் குள்ளே
விழுந்ததுமே எங்கிருந்தோ கூட்டம் வந்து
 

மீனவர்கள் நாங்களெனக் குதித்து மீட்டார்! 
மேனிலையர் வேறுசிலர் மேனி முந்தார்.
 

இனாங்கு தீர்மொழியால் தண்மை காட்டி
எடுத்தார்கள் குதித்தாளை மூழ்கு முன்னே. 



இன்னாங்கு  இனாங்கு என எதுகை நோக்கிச் சுருங்கிற்று. 
பொருள்: துன்பம்.
தண்மை :  குளிர்ச்சி.


கருத்துகள் இல்லை: